வயது முதிர்வு அடைந்த திருநங்கைகளுக்கு ஓய்வூதியம், நில உரிமை பட்டா, பட்டா வழங்கிய திருநங்கைகளுக்கு வீடு கட்டுவது போன்ற அடிப்படைத் தேவைகள் குறித்து மனுக்கள் வழங்கப்பட்டது.
கோவை: பொள்ளாச்சியில் திருநங்கைகளுக்கு சிறப்பு குறைதீர்ப்பு கூட்டம் நடைபெற்றது. இதில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனுக்கள் வழங்கப்பட்டது.
பொள்ளாச்சி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஏராளமான திருநங்கைகள் உள்ளனர். அவர்களது, அடிப்படைத் தேவைகள் மற்றும் குறைகளை கேட்டு அறிய அரசு சார்பில் இன்று பொள்ளாச்சி காவலர் திருமண மண்டபத்தில் குறைதீர்ப்பு கூட்டம் நடைபெற்றது.

பொள்ளாச்சி சார் ஆட்சியர் தாக்கரே சுபம் ஞான தேவ் ராவ் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், ஏராளமான திருநங்கைகள் மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
வயது முதிர்வு அடைந்த திருநங்கைகளுக்கு ஓய்வூதியம், நில உரிமை பட்டா, பட்டா வழங்கிய திருநங்கைகளுக்கு வீடு கட்டுவது போன்ற அடிப்படைத் தேவைகள் குறித்து மனுக்கள் வழங்கப்பட்டது.
மேலும், திருநங்கைகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதற்கு நன்றி தெரிவித்த திருநங்கைகள், தொடர்ந்து அரசு இந்த திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.

பொள்ளாச்சி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஏராளமான திருநங்கைகள் உள்ளனர். அவர்களது, அடிப்படைத் தேவைகள் மற்றும் குறைகளை கேட்டு அறிய அரசு சார்பில் இன்று பொள்ளாச்சி காவலர் திருமண மண்டபத்தில் குறைதீர்ப்பு கூட்டம் நடைபெற்றது.
பொள்ளாச்சி சார் ஆட்சியர் தாக்கரே சுபம் ஞான தேவ் ராவ் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், ஏராளமான திருநங்கைகள் மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
வயது முதிர்வு அடைந்த திருநங்கைகளுக்கு ஓய்வூதியம், நில உரிமை பட்டா, பட்டா வழங்கிய திருநங்கைகளுக்கு வீடு கட்டுவது போன்ற அடிப்படைத் தேவைகள் குறித்து மனுக்கள் வழங்கப்பட்டது.
மேலும், திருநங்கைகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதற்கு நன்றி தெரிவித்த திருநங்கைகள், தொடர்ந்து அரசு இந்த திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.