கோவை மாவட்ட பாஜகவினர் தமிழக அரசை கண்டித்து உண்ணாவிரத போராட்டம்..!

மனசாட்சியின் படி பதவியேற்றவர்கள் மனசாட்சி இல்லாமல் செயல்படுவதைக் கண்டித்து, இந்த உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படுகிறது என பாஜக தேசிய மகளிர் அணி தலைவரும், எம்.எல்.ஏவுமான வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.


கோவை: தமிழகம் முழுவதும் இன்று தமிழக அரசை கண்டித்து பாஜகவினர் உண்ணாவிரத போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர்.



தமிழக அரசை கண்டித்து பாஜகவினர் இன்று தமிழகம் முழுவதும் உண்ணாவிரத போராட்டம் மேற்கொண்டு வருகின்றனர்.



அதன் ஒரு பகுதியாக கோவை சிவானந்தா காலனி பகுதியில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.



இதில் பாஜக தேசிய மகளிரணித் தலைவர் வானதி சீனிவாசன், மூத்த தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.



அப்போது செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த வானதி சீனிவாசன், மனசாட்சியின் படி பதவியேற்றவர்கள் மனசாட்சி இல்லாமல் செயல்படுவதைக் கண்டித்து, இந்த உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படுகின்றது.

திமுக தனது தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும். பெட்ரோல், டீசல் விலையை இரண்டு முறை மாற்றியமைத்து மத்திய பாஜக அரசு மக்களுக்கு பயனளித்துள்ளது. பாஜக ஆளும் மாநில அரசுகளும் வரியை குறைத்துள்ளன. பெட்ரோல், டீசல் விலையை குறைப்போம் என்ற, திமுக அதை செய்யாமல் மக்களை ஏமாற்றி வருகிறது.

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட்டுள்ளது. லாக்கப் மரணங்கள் அதிகரித்துள்ளது. குடும்பப் பெண்களுக்கு 1000 ரூபாய் வழங்கப்படும் என்ற வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை. அதிமுக ஆட்சியில் இருந்த தாலிக்குத் தங்கம், இரு சக்கர வாகனம் போன்ற திட்டங்களை இந்த அரசு நிறுத்தி விட்டது.

சமூகப் பாதுகாப்பு திட்டங்களை நிறுத்தி இருக்கின்றது. கோவையில் சாலைகள் மோசமாக இருக்கின்றது. முழுமையாகச் சாலைகள் சீரமைக்கப்படவில்லை. ஸ்மார்ட் சிட்டி பணிகள் வேகப்படுத்த வேண்டும்” என தெரிவித்தார்.

Newsletter

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...