சாலையோரத்தில் நிறுத்தப்படும் வாகனங்களால் கோவை பொள்ளாச்சி நகருக்குள் கடும் போக்குவரத்து நெரிசல் - பொதுமக்கள் அவதி..!

சாலை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ள பகுதிகளில் வாகனங்களை நிறுத்தி செல்வதால் சாலைகள் குறுகலாக உள்ளது. இதனால், பள்ளி கல்லூரி மற்றும் பணிக்குச் செல்லும் வாகன ஓட்டிகள் மட்டுமின்றி, பேருந்துகளும் வாகன நெருக்கடியில் சிக்கி ஊர்ந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.


கோவை: சாலையோரத்தில் நிறுத்தப்படும் வாகனங்களால் கோவை பொள்ளாச்சி நகருக்குள் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

பொள்ளாச்சி நகரின் முக்கிய சாலைகள் ஆன பொள்ளாச்சி கோவை ரோடு, பாலக்காடு ரோடு, உடுமலை ரோடு உள்ளிட்ட பகுதிகளில் சாலை விரிவாக்கம் செய்யப்பட்டு சாலை நடுவே தடுப்பு சுவர்கள் அமைக்கப்பட்டுள்ளது.

இதில், குறிப்பாக கோவை ரோடு சந்திப்பு, பாலக்காடு ரோடு சந்திப்பு, பல்லடம் ரோடு சந்திப்பு உள்ளிட்ட பகுதிகளில் வளைவு பாதைகள் (ரவுண்டானா) அமைக்கப்பட்டு வாகன போக்குவரத்திற்கு ஏதுவாக சாலைகள் அமைக்கப்பட்டுள்ளது.



இந்த நிலையில், சாலை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ள பகுதிகளில் நான்கு சக்கர வாகனங்கள், இருசக்கர வாகனங்களை நிறுத்தி செல்வதால் சாலைகள் குறுகலாக உள்ளது.



இதனால், பள்ளி கல்லூரி மற்றும் பணிக்குச் செல்லும் வாகன ஓட்டிகள் மட்டுமின்றி, பேருந்துகளும் வாகன நெருக்கடியில் சிக்கி ஊர்ந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

முக்கிய சந்திப்பு பகுதிகளில் போக்குவரத்து காவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ள போதிலும், சாலை ஓரங்களில் விதி மீறி நிறுத்தப்படும் வாகனங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்காததால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாகவும், அத்து மீறி நிறுத்தப்படும் வாகனங்கள் மீது அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...