சாலை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ள பகுதிகளில் வாகனங்களை நிறுத்தி செல்வதால் சாலைகள் குறுகலாக உள்ளது. இதனால், பள்ளி கல்லூரி மற்றும் பணிக்குச் செல்லும் வாகன ஓட்டிகள் மட்டுமின்றி, பேருந்துகளும் வாகன நெருக்கடியில் சிக்கி ஊர்ந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
கோவை: சாலையோரத்தில் நிறுத்தப்படும் வாகனங்களால் கோவை பொள்ளாச்சி நகருக்குள் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
பொள்ளாச்சி நகரின் முக்கிய சாலைகள் ஆன பொள்ளாச்சி கோவை ரோடு, பாலக்காடு ரோடு, உடுமலை ரோடு உள்ளிட்ட பகுதிகளில் சாலை விரிவாக்கம் செய்யப்பட்டு சாலை நடுவே தடுப்பு சுவர்கள் அமைக்கப்பட்டுள்ளது.
இதில், குறிப்பாக கோவை ரோடு சந்திப்பு, பாலக்காடு ரோடு சந்திப்பு, பல்லடம் ரோடு சந்திப்பு உள்ளிட்ட பகுதிகளில் வளைவு பாதைகள் (ரவுண்டானா) அமைக்கப்பட்டு வாகன போக்குவரத்திற்கு ஏதுவாக சாலைகள் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், சாலை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ள பகுதிகளில் நான்கு சக்கர வாகனங்கள், இருசக்கர வாகனங்களை நிறுத்தி செல்வதால் சாலைகள் குறுகலாக உள்ளது.

இதனால், பள்ளி கல்லூரி மற்றும் பணிக்குச் செல்லும் வாகன ஓட்டிகள் மட்டுமின்றி, பேருந்துகளும் வாகன நெருக்கடியில் சிக்கி ஊர்ந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
முக்கிய சந்திப்பு பகுதிகளில் போக்குவரத்து காவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ள போதிலும், சாலை ஓரங்களில் விதி மீறி நிறுத்தப்படும் வாகனங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்காததால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாகவும், அத்து மீறி நிறுத்தப்படும் வாகனங்கள் மீது அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொள்ளாச்சி நகரின் முக்கிய சாலைகள் ஆன பொள்ளாச்சி கோவை ரோடு, பாலக்காடு ரோடு, உடுமலை ரோடு உள்ளிட்ட பகுதிகளில் சாலை விரிவாக்கம் செய்யப்பட்டு சாலை நடுவே தடுப்பு சுவர்கள் அமைக்கப்பட்டுள்ளது.
இதில், குறிப்பாக கோவை ரோடு சந்திப்பு, பாலக்காடு ரோடு சந்திப்பு, பல்லடம் ரோடு சந்திப்பு உள்ளிட்ட பகுதிகளில் வளைவு பாதைகள் (ரவுண்டானா) அமைக்கப்பட்டு வாகன போக்குவரத்திற்கு ஏதுவாக சாலைகள் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், சாலை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ள பகுதிகளில் நான்கு சக்கர வாகனங்கள், இருசக்கர வாகனங்களை நிறுத்தி செல்வதால் சாலைகள் குறுகலாக உள்ளது.
இதனால், பள்ளி கல்லூரி மற்றும் பணிக்குச் செல்லும் வாகன ஓட்டிகள் மட்டுமின்றி, பேருந்துகளும் வாகன நெருக்கடியில் சிக்கி ஊர்ந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
முக்கிய சந்திப்பு பகுதிகளில் போக்குவரத்து காவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ள போதிலும், சாலை ஓரங்களில் விதி மீறி நிறுத்தப்படும் வாகனங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்காததால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாகவும், அத்து மீறி நிறுத்தப்படும் வாகனங்கள் மீது அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.