இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் சுமார் 300-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு பாரத் மாதா கி ஜே என்ற முழக்கங்களை எழுப்பி உண்ணாவிரத போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
கோவை: தமிழகம் முழுவதும் இன்று தமிழக அரசை கண்டித்து பாஜகவினர் உண்ணாவிரத போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக கோவையில் கோவை மாவட்ட பாஜகவினர் சிவானந்த காலனி பகுதியில் உண்ணாவிரத போராட்டம் மேற்கொண்டுள்ளனர்.
இந்த உண்ணாவிரத போராட்டத்தில் பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன், சிபி ராதாகிருஷ்ணன் முன்னிலை வகிக்கின்றனர்.
இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் கோவை மாவட்ட தலைவர் பாலாஜி உத்தமன் உட்பட சுமார் 300க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு பாரத் மாதா கி ஜே என்ற முழக்கங்களை எழுப்பி உண்ணாவிரத போராட்டத்தில் கலந்து கொண்டனர்.