கோவையில் தீர்வு காணப்படாத மனுக்கள் குறித்து விளக்கம் கேட்ட சட்டமன்றப் பேரவை ஏடுகள் குழுவினர்..!

தமிழ்நாடு சட்டமன்ற பேரவை, பேரவையின் முன்வைக்கப்பட்ட ஏடுகள் குழுவின் தலைவர், இராமகிருஷ்ணன் தலைமையில், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆய்வுக் கூட்டம் மேற்கொண்டனர்.



கோவை: கோவை ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்ற பேரவை, பேரவையின் முன்வைக்கப்பட்ட ஏடுகள் குழுவினர் நடத்திய ஆய்வுக் கூட்டத்தில், மாவட்டத்தில் முடிக்கப்படாமல் இருக்கும் அரசு திட்டங்கள் குறித்து விளக்கம் கேட்கப்பட்டது.

அரசு வழங்கும் முதலீடுகள் எந்த நோக்கத்திற்காக ஒதுக்கீடு செய்யப்பட்டதோ, அத்திட்டம் முறையாக நிறைவேற்றப்பட்டுள்ளதா..? என ஒவ்வொரு ஆண்டும், ஒவ்வொரு துறைக்கும் அரசால் ஒதுக்கீடு செய்யப்பட்ட முதலீடுகளுக்கான கணக்குகளையும், தணிக்கை கணக்குகளையும், சட்டப் பேரவையில் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு தெரிவிப்பதே இக்குழுவின் நோக்கமாகும்.



அதன்படி, தமிழ்நாடு சட்டமன்ற பேரவை, பேரவையின் முன்வைக்கப்பட்ட ஏடுகள் குழுவினர் இன்று காலை கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆய்வுக் கூட்டம் மேற்கொண்டனர்.



இக்குழுவின், தலைவர் இராமகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற ஆய்வு கூட்டத்தில், இக்குழுவை சேர்ந்த உறுப்பினர்கள் அப்துல் வஹாப், பொன்னுசாமி உள்ளிட்டோர், கோவை மாவட்டத்தில் முடிக்கப்படாமல் இருக்கும் அரசு திட்டங்கள் மற்றும் மனுக்கள் குறித்து விளக்கம் கேட்டனர்.



கூட்டத்தில், கோவை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன், மாநகராட்சி ஆணையாளர் மு.பிரதாப், வருவாய் அலுவலர், மேயர் மற்றும் துணை மேயர் உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

இக்குழுவின், கீழ் கிட்டத்தட்ட 64 பொதுத்துறை நிறுவனங்கள், 2 வாரியங்கள் செயல்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...