கோவை வடவள்ளி சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள கடைகளுக்குள் புகுந்து அட்டகாசம் செய்யும் மர்ம நபர்களை கண்டறிந்து பிடிக்க, போலீசார் ரோந்து பணிகளை தீவிரமாக்க வியாபாரிகள் சங்கம் கோரிக்கை வைத்துள்ளனர்.
கோவை: கோவை வடவள்ளியில் சிறு-குறு கடைகளுக்குள் மர்ம நபர்கள் புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றனர்.
கோவை வடவள்ளி வியாபாரிகள் சம்மேளனத்தினர் வடவள்ளி காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்று அளிக்கப்பட்டுள்ளனர். அதில், வடவள்ளி அதன் சுற்றுவட்டார பகுதிகளான சோமயம்பாளையம், கல்வீரம்பாளையம், கணுவாய், போன்ற பல்வேறு பகுதிகளில் சிறு குறு வியாபாரிகள் தங்களது தொழிலை நடத்தி வரும் நிலையில், இரவு நேரங்களில் உலா வரும் மர்ம நபர்கள், கடையை நோட்டமிட்டு, கடையின் பூட்டுகளை, உடைத்து உள்ளே சென்று அங்கு இருக்கும் பொருட்களையும் விலை உயர்ந்த செல்போன்களையும், பணத்தையும், எடுத்துச் செல்கின்றனர்.
இந்த நிலையில், கடந்த 3-ம் தேதி, அதிகாலை 3-மணியளவில் கணுவாய் பகுதியில், உள்ள ஒரு பேன்சி கடைக்குள் புகுந்த மர்ம நபர்கள், அங்கிருந்த செல்போனை திருடி சென்றுள்ளனர்.

இந்த சிசிடிவி காட்சிகளை கொண்டு வடவள்ளி, வியாபாரிகள் சம்மேளனத்தினர் நேற்று வடவள்ளி காவல் நிலையத்தில் புகார் மனு அளித்துள்ளனர்.
சம்பந்தப்பட்ட சிசிடிவி காட்சிகளையும் காவல்துறையினரிடம் வழங்கியுள்ளனர். இதுகுறித்து போலீசார் இரவு நேரங்களில் ரோந்து பணியில், அதிகமாக காவலர்களை ஈடுபடுத்தி சிறு குறு வியாபாரிகளின் கடையை பாதுகாக்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளனர். மேலும் இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபடும் குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.
கோவை வடவள்ளி வியாபாரிகள் சம்மேளனத்தினர் வடவள்ளி காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்று அளிக்கப்பட்டுள்ளனர். அதில், வடவள்ளி அதன் சுற்றுவட்டார பகுதிகளான சோமயம்பாளையம், கல்வீரம்பாளையம், கணுவாய், போன்ற பல்வேறு பகுதிகளில் சிறு குறு வியாபாரிகள் தங்களது தொழிலை நடத்தி வரும் நிலையில், இரவு நேரங்களில் உலா வரும் மர்ம நபர்கள், கடையை நோட்டமிட்டு, கடையின் பூட்டுகளை, உடைத்து உள்ளே சென்று அங்கு இருக்கும் பொருட்களையும் விலை உயர்ந்த செல்போன்களையும், பணத்தையும், எடுத்துச் செல்கின்றனர்.
இந்த நிலையில், கடந்த 3-ம் தேதி, அதிகாலை 3-மணியளவில் கணுவாய் பகுதியில், உள்ள ஒரு பேன்சி கடைக்குள் புகுந்த மர்ம நபர்கள், அங்கிருந்த செல்போனை திருடி சென்றுள்ளனர்.
இந்த சிசிடிவி காட்சிகளை கொண்டு வடவள்ளி, வியாபாரிகள் சம்மேளனத்தினர் நேற்று வடவள்ளி காவல் நிலையத்தில் புகார் மனு அளித்துள்ளனர்.
சம்பந்தப்பட்ட சிசிடிவி காட்சிகளையும் காவல்துறையினரிடம் வழங்கியுள்ளனர். இதுகுறித்து போலீசார் இரவு நேரங்களில் ரோந்து பணியில், அதிகமாக காவலர்களை ஈடுபடுத்தி சிறு குறு வியாபாரிகளின் கடையை பாதுகாக்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளனர். மேலும் இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபடும் குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.