ஆண்டுதோறும் ஆனி மாதத்தில், தேவேந்திர குல வேளாளர் சமுகம் சார்பில் கோவை அடுத்த பேரூர் பகுதியில் ஆனித் திருமஞ்சனம் சித்திர மேழி பொன்னேர் நாற்று நடவு திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது.
கோவை: கோவையில் சித்திரமேழி பொன்னேர் நாற்று நடும் திருவிழாவில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்று நாற்றுகளை நடவு செய்து பட்டின பெருமானை வழிபட்டனர்.
தேவேந்திர குல வேளாளர் சமுகம் சார்பில் ஆண்டுதோறும் ஆனி மாதத்தில் கோவை அடுத்த பேரூர் பகுதியில் ஆனித் திருமஞ்சனம் சித்திரமேழி பொன்னேர் நாற்று நடவு திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழகம் முழுவதிலும் உள்ள தேவேந்திர குல வேளாளர் சமுக மக்கள் இந்த நாற்று நடும் நிகழ்வை விழாவாக கொண்டாடுவது வழக்கம்.
அதன்படி, மேலை சிதம்பரம் என அழைக்கப்படும் பேரூர் பட்டீஸ்வரர் மற்றும் பச்சைநாயகி உழவன், உழத்தியாக உருக்கொண்டு, இறைவனே நாற்று நட்டு விவசாயம் செய்ததாக கருதப்படும் ஐதிகத்தின் அடிப்படையில், இந்த திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது.
அந்த வகையில் இந்த ஆண்டு நாற்று நடும் திருவிழா இச்சமுகத்தின் நான்கு வம்ச பட்டக்காரர்கள் தலைமையில் நடைபெற்றது.
இதில், ஏர் மற்றும் ஏர்பூட்டிய மாடுகளை உழவு செய்து பட்டிப்பெருமான் முன்னிலையில் மேலதாலங்கள் முழங்க ஆயிரக்கணக்கானோர் பங்கேற்று நாற்றுகளை நடவு செய்து வழிபட்டனர்.