மாதவனின் 'ராக்கெட்ரி' படத்துக்கு வரிச்சலுகை வழங்க வேண்டும் - கோவையில் அர்ஜுன் சம்பத் கோரிக்கை

ஒவ்வொரு இந்தியரும் இப்படத்தைப் பார்க்க வேண்டும், தமிழக அரசு இத்திரைப்படத்துக்கு வரிவிலக்கு அளிப்பதுடன், அனைத்துக் கல்லுாரிகளிலும் திரையிட வேண்டும், என, தமிழக முதல்வருக்கு கோரிக்கை விடுக்கிறேன்.



கோவை: நடிகர் மாதவன் இயக்கி நடித்துள்ள, ‘ராக்கெட்ரி: நம்பி விளைவு’ படத்தை ஒரு பாடமாக எடுத்துக்கொண்டு, நமது விஞ்ஞானிகளை, நாட்டின் வளர்ச்சியை பாதுகாத்து, வெளிநாடுகளின் சதித்திட்டங்களை முறியடிக்க வேண்டும் என்றும் இப்படத்திற்கு, தமிழக அரசு வரிவிலக்கு அளிப்பதுடன், அனைத்துக் கல்லுாரிகளிலும் திரையிட வேண்டும், என, தமிழக முதல்வருக்கு கோரிக்கை விடுக்கிறேன் என்று இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் தெரிவித்துள்ளார்.



திரைப்படம் குறித்து கருத்து தெரிவிக்க செய்தியாளர்களை சந்தித்த இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத், ராக்கெட்ரி படத்தை, தயாரித்து, இயக்கி, நடித்துள்ள மாதவன், நம்பி நாராயணனாகவே வாழ்ந்துள்ளார். நம்பி நாராயணன், கிரையோஜெனிக் தொழில்நுட்பத்தை, இந்தியாவுக்கு கொண்டு வந்தவர். நம்நாட்டில் "விகாஸ்" என்ற இன்ஜினை உருவாக்கியவர்.



தலைசிறந்த விஞ்ஞானியான அவர், திருநெல்வேலியைச் சேர்ந்தவர். நம்பி நாராயணனின் அறிவியல் அறிவுக்கு முன், உலகமே தலை வணங்கியது. ஆனால், போட்டியாளர்கள், அவருக்கு தொந்தரவு கொடுத்து, அவர் தகாத உறவோடு வாழ்ந்தார் என அவர் மீது பழி சுமத்தினர். பாகிஸ்தானுக்கு, நமது தொழில்நுட்பங்களை விற்று, தேச துரோகம் செய்தார் என வழக்குத் தொடர்ந்து, அவரைத் துன்புறுத்தி, சிறையில் அடைத்தனர்.

இதன் காரணமாக, கிரையோஜெனிக் தொழில்நுட்பத்தில் நமது நாடு 10 ஆண்டுகள் பின்தங்கியது. இது இந்தியாவின் ஒவ்வொரு வளர்ச்சியையும் தடுப்பதற்கான மிகப்பெரும் சதித்திட்டம். நம்பி நாராயணனைப் பொறுத்தவரை, அமெரிக்காவில் சதித்திட்டம் தீட்டப்பட்டு, அவர் அவமானப்படுத்தப்பட்டார்.

நம்பி நாராயணன், உச்ச நீதிமன்றத்தில் தன் மீதான பொய் வழக்கில் போராடி வென்றது, அவரின் குடும்பத்தில் ஏற்பட்ட பாதிப்புகள் என, அனைத்தையும் இப்படத்தில் அற்புதமாக காட்சிப்படுத்தியுள்ளனர். ஒவ்வொரு இந்தியரும் இப்படத்தைப் பார்க்க வேண்டும், தமிழக அரசு இத்திரைப்படத்துக்கு வரிவிலக்கு அளிப்பதுடன், அனைத்துக் கல்லுாரிகளிலும் திரையிட வேண்டும், என, தமிழக முதல்வருக்கு கோரிக்கை விடுக்கிறேன்.



இத்திரைப்படம் நிறைவுபெறும் போது, நம்பிநாராயணன் வேறு, மாதவன் வேறு என வித்தியாசப்படுத்திப் பார்க்க முடியாது. துணிச்சலுடன் இப்படத்தை எடுத்துள்ளார் மாதவன்.

அணைகட்டுவதோ, மின் உற்பத்தியோ நம் நாட்டில் எந்தவொரு வளர்ச்சித் திட்டமாயினும், அது பற்றிய தவறான செய்திகளைப் பரப்பி, நாட்டின் வளர்ச்சியைத் தடுக்கிறார்கள்.

இப்படத்தை ஒரு பாடமாக எடுத்துக்கொண்டு, நமது விஞ்ஞானிகளை, நாட்டின் வளர்ச்சியை பாதுகாக்க வேண்டும். வெளிநாடுகளின் சதித்திட்டங்களை முறியடிக்க வேண்டும். இந்திய அரசு இப்படத்துக்கு வரிச்சலுகை வழங்க வேண்டும்", என்று தெரிவித்துள்ளார்.

Newsletter

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...