செல்லப் பிராணிகளுக்கு மின் மயானம் வேண்டும் - எழுச்சி கரங்கள் அறக்கட்டளையினர் மனு

நகர்ப்புறத்தில் செல்லப் பிராணிகளை அடக்கம் செய்ய மின் மயானத்திற்கும், பராமரிப்பிற்கும் இடமும் ஒதுக்கும் பட்சத்தில், அரசு சட்ட திட்டங்களுக்கு கட்டுப்பட்டு செல்லப் பிராணிகளை பராமரிப்போம் என்று மனு அளித்துள்ளனர்.



கோவை: செல்லப் பிராணிகளை அடக்கம் செய்ய மின் மயானம் வேண்டும், என்று கோவையை சேர்ந்த எழுச்சி கரங்கள் அறக்கட்டளையினர், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

இது குறித்து அறக்கட்டளையின் அறங்காவலர் ராஜ் கிருஷ்ணா அளித்த மனுவில், எங்கள் அறக்கட்டளை சார்பில் கடந்த 10 ஆண்டுகளாக செல்லப் பிராணிகள் சாலை விபத்துகளில் அடிபட்டு கிடந்தால் முதலுதவியும், உயிரிழந்து கிடந்தால் நல்லடக்கமும் செய்து வருகிறோம்.



கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு, கோவை மாவட்ட ஆட்சியராக இருந்த கருணாகரனிடம், மயானம் அமைக்க இடம் ஒதுக்க மனு கொடுக்கப்பட்டது. மனுவை பெற்றுக்கொண்ட ஆட்சியர், கிணத்துக்கடவு பகுதியில் இடம் ஒதுக்க பரிந்துரைத்தார். நாங்கள் நகர்ப்புற பகுதியில் இடம் கேட்டதால், பரிசீலனை நடைபெற்று வருவதாக தெரிவித்தார். பின்னர், பொதுமக்கள் நகர்ப்புற பகுதியில் செல்லப் பிராணிகளை அடக்கம் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதால், மிகவும் சிரமமாக உள்ளது, எனக் குறிப்பிட்டிருந்தார்.

எனவே, எங்களுக்கு முன்னுரிமை கொடுத்து நகர்ப்புறத்தில் செல்லப் பிராணிகளை அடக்கம் செய்ய மின் மயானத்திற்கும், பராமரிப்பிற்கும் இடமும் ஒதுக்கும் பட்சத்தில், அரசு சட்ட திட்டங்களுக்கு கட்டுப்பட்டு செல்லப் பிராணிகளை பராமரிப்போம், என்று அவர்கள் மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.

Newsletter

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...