கோவை மதுக்கரை மார்க்கெட் பகுதியில் அமையவுள்ள டாஸ்மாக் கடைக்கு மக்கள் எதிர்ப்பு- மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு..!

கோவை மதுக்கரை மார்க்கெட் பகுதியில் வசிக்கும் மக்கள் தங்கள் பகுதியில் புதிதாக வரும் டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக 'டாஸ்மாக் கடை வேண்டாம்' என பதாகைகளை ஏந்தி கண்டனத்தை வெளிப்படுத்தினர்.


கோவை: மதுக்கரை மார்க்கெட் பகுதியில் அமைய உள்ள டாஸ்மாக் கடைக்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

கோவை மதுக்கரை மார்க்கெட் பகுதியில் வசிக்கும் மக்கள் தங்கள் பகுதியில் வரும் டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக டாஸ்மாக் கடை வேண்டாம் என வலியுறுத்தியும், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.



மனு அளிக்க வந்த அவர்கள் மதுக்கடை வேண்டாம் என்ற பதாகைகளை ஏந்தி கண்டனத்தை வெளிப்படுத்தினர்.

இது குறித்து பேசிய அப்பகுதி மக்கள், அப்பகுதியில் குடியிருப்புகள், பேருந்து நிலையம், மருத்துவமனை, வார சந்தைகள் ஆகியவை உள்ள நிலையில், டாஸ்மாக் கடைகள் அங்கு அமைந்தால் பொதுமக்களுக்கு மிகவும் இடையூறாக இருக்கும்.

பெண்கள் மற்றும் பள்ளி கல்லூரி மாணவர்கள் சென்று வர மிகவும் சிரமமாக இருக்கும் எனவும், எனவே டாஸ்மாக் கடை தங்களுக்கு வேண்டாம் என வலியுறுத்தினர். மேலும், இந்த ஆட்சியில் டாஸ்மாக் கடையை வீடுகளுக்குள்ளேயே நிறுவுவார்கள் போல் உள்ளது எனவும் ஆத்திரம் அடைந்தனர்.

Newsletter

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...