கோவை மதுக்கரை மார்க்கெட் பகுதியில் வசிக்கும் மக்கள் தங்கள் பகுதியில் புதிதாக வரும் டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக 'டாஸ்மாக் கடை வேண்டாம்' என பதாகைகளை ஏந்தி கண்டனத்தை வெளிப்படுத்தினர்.
கோவை: மதுக்கரை மார்க்கெட் பகுதியில் அமைய உள்ள டாஸ்மாக் கடைக்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
கோவை மதுக்கரை மார்க்கெட் பகுதியில் வசிக்கும் மக்கள் தங்கள் பகுதியில் வரும் டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக டாஸ்மாக் கடை வேண்டாம் என வலியுறுத்தியும், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

மனு அளிக்க வந்த அவர்கள் மதுக்கடை வேண்டாம் என்ற பதாகைகளை ஏந்தி கண்டனத்தை வெளிப்படுத்தினர்.
இது குறித்து பேசிய அப்பகுதி மக்கள், அப்பகுதியில் குடியிருப்புகள், பேருந்து நிலையம், மருத்துவமனை, வார சந்தைகள் ஆகியவை உள்ள நிலையில், டாஸ்மாக் கடைகள் அங்கு அமைந்தால் பொதுமக்களுக்கு மிகவும் இடையூறாக இருக்கும்.
பெண்கள் மற்றும் பள்ளி கல்லூரி மாணவர்கள் சென்று வர மிகவும் சிரமமாக இருக்கும் எனவும், எனவே டாஸ்மாக் கடை தங்களுக்கு வேண்டாம் என வலியுறுத்தினர். மேலும், இந்த ஆட்சியில் டாஸ்மாக் கடையை வீடுகளுக்குள்ளேயே நிறுவுவார்கள் போல் உள்ளது எனவும் ஆத்திரம் அடைந்தனர்.
கோவை மதுக்கரை மார்க்கெட் பகுதியில் வசிக்கும் மக்கள் தங்கள் பகுதியில் வரும் டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக டாஸ்மாக் கடை வேண்டாம் என வலியுறுத்தியும், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
மனு அளிக்க வந்த அவர்கள் மதுக்கடை வேண்டாம் என்ற பதாகைகளை ஏந்தி கண்டனத்தை வெளிப்படுத்தினர்.
இது குறித்து பேசிய அப்பகுதி மக்கள், அப்பகுதியில் குடியிருப்புகள், பேருந்து நிலையம், மருத்துவமனை, வார சந்தைகள் ஆகியவை உள்ள நிலையில், டாஸ்மாக் கடைகள் அங்கு அமைந்தால் பொதுமக்களுக்கு மிகவும் இடையூறாக இருக்கும்.
பெண்கள் மற்றும் பள்ளி கல்லூரி மாணவர்கள் சென்று வர மிகவும் சிரமமாக இருக்கும் எனவும், எனவே டாஸ்மாக் கடை தங்களுக்கு வேண்டாம் என வலியுறுத்தினர். மேலும், இந்த ஆட்சியில் டாஸ்மாக் கடையை வீடுகளுக்குள்ளேயே நிறுவுவார்கள் போல் உள்ளது எனவும் ஆத்திரம் அடைந்தனர்.