இந்த ஆர்ப்பாட்டத்தின் போது எம்.எல்.ஏ க.செல்வராஜ் உருவ படத்தை தீயிட்டுக் கொளுத்தி இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், ஒருவர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பூர்: திருப்பூர் எம்.எல்.ஏ செல்வராஜ் படத்தை எரித்து இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூர் 15.வேலம்பாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் பள்ளிவாசலை சீல் வைக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்நிலையில், நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தினால் இஸ்லாமிய சமுதாயத்தை சேர்ந்தவர்கள் மத்தியில் பதட்டமான சூழல் உருவாகும் என திருப்பூர் தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் க.செல்வராஜ் முதல்வருக்கு கடிதம் எழுதினார்.
இதனை கண்டித்து இந்து முன்னணி சார்பில் திருப்பூர் புதிய பேருந்து நிலையம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தின் போது எம்.எல்.ஏ க.செல்வராஜ் உருவ படத்தை தீயிட்டுக் கொளுத்தி இந்து முன்னணி அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் ஒருவர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.