கோவை - பொள்ளாச்சி நெடுஞ்சாலையில் சுங்கச்சாவடி வேண்டாம் - முதல்வருக்கு பொதுமக்கள் கடிதம்..!

சாலை விரிவாக்க பணிகள் முடிந்த நிலையில் தற்போது ஏழூர் பிரிவு பகுதியில் டோல் அமைப்பதற்கு சாலையை அளக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், டோல் பிளாசா வந்தால் தங்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படும், இதனை நிறுவாமல் இருக்க நடவடிக்கை எடுக்க கோரி முதல்வருக்கு அப்பகுதி மக்கள் கடிதம் அனுப்ப உள்ளனர்.


கோவை: கோவை-பொள்ளாச்சி நெடுஞ்சாலையில் சுங்கச்சாவடி வேண்டாம் என முதல்வருக்கு பொதுமக்கள் கடிதம் அனுப்ப உள்ளனர்.

2016-ம் ஆண்டு கோவை- பொள்ளாச்சி நெடுஞ்சாலை விரிவாக்கப்பணிகளும், சுங்கச்சாவடி அமைக்கும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டன. அப்போது, சாலை விரிவாக்கத்திற்கு பொதுமக்கள் அதற்குச் சம்மதித்த நிலையில், சுங்கச்சாவடி அமைக்க கடும் எதிர்ப்புகள் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், சாலை விரிவாக்க பணிகள் முடிந்த நிலையில் தற்போது ஏழூர் பிரிவு பகுதியில் டோல் அமைப்பதற்கு சாலையை அளக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், டோல் பிளாசா வந்தால் தங்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படும் எனவும் கூறி டோல் பிளாசா நிறுவாமல் இருக்க நடவடிக்கை எடுக்கக் கோரி தமிழக முதல்வருக்கு அப்பகுதி மக்கள் கடிதம் அனுப்ப உள்ளனர்.



இந்த கடிதத்தின் நகலைக் கோவை மாவட்ட ஆட்சியரிடமும் வழங்குவதற்கு வந்திருந்தனர். டோல் பிரச்சனை குறித்து ஏற்கனவே கிராம சபை கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரிடம் தெரியப்படுத்தி உள்ளதாகக் கூறிய அவர்கள் அங்கு டோல் பிளாசா அமைந்தால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படும் எனவும், விவசாய நிலங்கள் பாதிக்கப்படும் எனவும் கூறினர்.

இந்த டோல் பிளாசா கோவை மாநகராட்சிக்கு 8-கி மீ தொலைவிலேயே அமைய உள்ளது. சட்ட விதிமுறைகளை மீறும் செயல் எனவும் தெரிவித்துள்ளனர்.

Newsletter

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...