சாலை விரிவாக்க பணிகள் முடிந்த நிலையில் தற்போது ஏழூர் பிரிவு பகுதியில் டோல் அமைப்பதற்கு சாலையை அளக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், டோல் பிளாசா வந்தால் தங்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படும், இதனை நிறுவாமல் இருக்க நடவடிக்கை எடுக்க கோரி முதல்வருக்கு அப்பகுதி மக்கள் கடிதம் அனுப்ப உள்ளனர்.
கோவை: கோவை-பொள்ளாச்சி நெடுஞ்சாலையில் சுங்கச்சாவடி வேண்டாம் என முதல்வருக்கு பொதுமக்கள் கடிதம் அனுப்ப உள்ளனர்.
2016-ம் ஆண்டு கோவை- பொள்ளாச்சி நெடுஞ்சாலை விரிவாக்கப்பணிகளும், சுங்கச்சாவடி அமைக்கும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டன. அப்போது, சாலை விரிவாக்கத்திற்கு பொதுமக்கள் அதற்குச் சம்மதித்த நிலையில், சுங்கச்சாவடி அமைக்க கடும் எதிர்ப்புகள் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், சாலை விரிவாக்க பணிகள் முடிந்த நிலையில் தற்போது ஏழூர் பிரிவு பகுதியில் டோல் அமைப்பதற்கு சாலையை அளக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், டோல் பிளாசா வந்தால் தங்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படும் எனவும் கூறி டோல் பிளாசா நிறுவாமல் இருக்க நடவடிக்கை எடுக்கக் கோரி தமிழக முதல்வருக்கு அப்பகுதி மக்கள் கடிதம் அனுப்ப உள்ளனர்.

இந்த கடிதத்தின் நகலைக் கோவை மாவட்ட ஆட்சியரிடமும் வழங்குவதற்கு வந்திருந்தனர். டோல் பிரச்சனை குறித்து ஏற்கனவே கிராம சபை கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரிடம் தெரியப்படுத்தி உள்ளதாகக் கூறிய அவர்கள் அங்கு டோல் பிளாசா அமைந்தால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படும் எனவும், விவசாய நிலங்கள் பாதிக்கப்படும் எனவும் கூறினர்.
இந்த டோல் பிளாசா கோவை மாநகராட்சிக்கு 8-கி மீ தொலைவிலேயே அமைய உள்ளது. சட்ட விதிமுறைகளை மீறும் செயல் எனவும் தெரிவித்துள்ளனர்.
2016-ம் ஆண்டு கோவை- பொள்ளாச்சி நெடுஞ்சாலை விரிவாக்கப்பணிகளும், சுங்கச்சாவடி அமைக்கும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டன. அப்போது, சாலை விரிவாக்கத்திற்கு பொதுமக்கள் அதற்குச் சம்மதித்த நிலையில், சுங்கச்சாவடி அமைக்க கடும் எதிர்ப்புகள் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், சாலை விரிவாக்க பணிகள் முடிந்த நிலையில் தற்போது ஏழூர் பிரிவு பகுதியில் டோல் அமைப்பதற்கு சாலையை அளக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், டோல் பிளாசா வந்தால் தங்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படும் எனவும் கூறி டோல் பிளாசா நிறுவாமல் இருக்க நடவடிக்கை எடுக்கக் கோரி தமிழக முதல்வருக்கு அப்பகுதி மக்கள் கடிதம் அனுப்ப உள்ளனர்.
இந்த கடிதத்தின் நகலைக் கோவை மாவட்ட ஆட்சியரிடமும் வழங்குவதற்கு வந்திருந்தனர். டோல் பிரச்சனை குறித்து ஏற்கனவே கிராம சபை கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரிடம் தெரியப்படுத்தி உள்ளதாகக் கூறிய அவர்கள் அங்கு டோல் பிளாசா அமைந்தால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படும் எனவும், விவசாய நிலங்கள் பாதிக்கப்படும் எனவும் கூறினர்.
இந்த டோல் பிளாசா கோவை மாநகராட்சிக்கு 8-கி மீ தொலைவிலேயே அமைய உள்ளது. சட்ட விதிமுறைகளை மீறும் செயல் எனவும் தெரிவித்துள்ளனர்.