கோவை-ஹிசார் இடையேயான ரயிலில் இரண்டடுக்கு ஏ.சி., வகுப்பு பெட்டிகள் தற்காலிகமாக இணைக்கப்படுவதாக தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்த ரயில், வரும், 6-ம் தேதி முதல், 27-ம் தேதி வரை இயக்கப்படும் என, ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கோவை: கோவை-ஹிசார் இடையேயான ரயிலில் இரண்டடுக்கு ஏ.சி., வகுப்பு பெட்டிகள் தற்காலிகமாக இணைக்கப்படுவதாக தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
கொரோனா பாதிப்புக்கு பின் அனைத்து வழித்தடங்களிலும் இயங்கும் ரயில்களின் எண்ணிக்கையை ரயில்வே நிர்வாகம் அதிகரித்து வருகிறது.
இத்துடன், ரயில்களில் கூடுதல் பெட்டிகளையும் இணைத்து வருகிறது. இதன் மூலம் கூடுதல் பயணிகள் பயணம் செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது. கோவையிலிருந்து ஹிசார் செல்லும்(வ.எண்: 22476) ரயிலில் கூடுதல் பெட்டிகளை இணைக்க வேண்டும் என, பயணிகள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது.
இதையடுத்து வரும், 9-ம் தேதி முதல், 30-ம் தேதி வரை இயக்கப்படும் இந்த ரயிலில் கூடுதலாக இரு இரண்டடுக்கு ஏ.சி., வகுப்பு பெட்டிகள் இணைக்கப்படவுள்ளது. மறுமார்க்கமாக, ஹிசாரில் இருந்து கோவை செல்லும்(வ.எண்:22475) ரயிலிலும் கூடுதலாக இரு ஏ.சி., வகுப்பு பெட்டிகள் இணைக்கப்படுகிறது.
இந்த ரயில், வரும், 6-ம் தேதி முதல், 27-ம் தேதி வரை இயக்கப்படும் என, ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கொரோனா பாதிப்புக்கு பின் அனைத்து வழித்தடங்களிலும் இயங்கும் ரயில்களின் எண்ணிக்கையை ரயில்வே நிர்வாகம் அதிகரித்து வருகிறது.
இத்துடன், ரயில்களில் கூடுதல் பெட்டிகளையும் இணைத்து வருகிறது. இதன் மூலம் கூடுதல் பயணிகள் பயணம் செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது. கோவையிலிருந்து ஹிசார் செல்லும்(வ.எண்: 22476) ரயிலில் கூடுதல் பெட்டிகளை இணைக்க வேண்டும் என, பயணிகள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது.
இதையடுத்து வரும், 9-ம் தேதி முதல், 30-ம் தேதி வரை இயக்கப்படும் இந்த ரயிலில் கூடுதலாக இரு இரண்டடுக்கு ஏ.சி., வகுப்பு பெட்டிகள் இணைக்கப்படவுள்ளது. மறுமார்க்கமாக, ஹிசாரில் இருந்து கோவை செல்லும்(வ.எண்:22475) ரயிலிலும் கூடுதலாக இரு ஏ.சி., வகுப்பு பெட்டிகள் இணைக்கப்படுகிறது.
இந்த ரயில், வரும், 6-ம் தேதி முதல், 27-ம் தேதி வரை இயக்கப்படும் என, ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.