கோவை-ஹிசார் இடையேயான ரயிலில் இரண்டடுக்கு ஏ.சி., வகுப்பு பெட்டிகள் தற்காலிகமாக இணைப்பு..!

கோவை-ஹிசார் இடையேயான ரயிலில் இரண்டடுக்கு ஏ.சி., வகுப்பு பெட்டிகள் தற்காலிகமாக இணைக்கப்படுவதாக தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்த ரயில், வரும், 6-ம் தேதி முதல், 27-ம் தேதி வரை இயக்கப்படும் என, ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.


கோவை: கோவை-ஹிசார் இடையேயான ரயிலில் இரண்டடுக்கு ஏ.சி., வகுப்பு பெட்டிகள் தற்காலிகமாக இணைக்கப்படுவதாக தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

கொரோனா பாதிப்புக்கு பின் அனைத்து வழித்தடங்களிலும் இயங்கும் ரயில்களின் எண்ணிக்கையை ரயில்வே நிர்வாகம் அதிகரித்து வருகிறது.

இத்துடன், ரயில்களில் கூடுதல் பெட்டிகளையும் இணைத்து வருகிறது. இதன் மூலம் கூடுதல் பயணிகள் பயணம் செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது. கோவையிலிருந்து ஹிசார் செல்லும்(வ.எண்: 22476) ரயிலில் கூடுதல் பெட்டிகளை இணைக்க வேண்டும் என, பயணிகள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது.

இதையடுத்து வரும், 9-ம் தேதி முதல், 30-ம் தேதி வரை இயக்கப்படும் இந்த ரயிலில் கூடுதலாக இரு இரண்டடுக்கு ஏ.சி., வகுப்பு பெட்டிகள் இணைக்கப்படவுள்ளது. மறுமார்க்கமாக, ஹிசாரில் இருந்து கோவை செல்லும்(வ.எண்:22475) ரயிலிலும் கூடுதலாக இரு ஏ.சி., வகுப்பு பெட்டிகள் இணைக்கப்படுகிறது.

இந்த ரயில், வரும், 6-ம் தேதி முதல், 27-ம் தேதி வரை இயக்கப்படும் என, ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Newsletter

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...