நேற்று இரவு, வால்பாறை உருளிக்கல் எஸ்டேட் பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி வளாகம் அருகே சுற்றித்திரிந்த 7 காட்டு யானைகள், பள்ளி சத்துணவு மையத்தின் சுவரை இடித்து சேதப்படுத்தியது.
கோவை: கோவை மாவட்டம் வால்பாறை சுற்றுவட்டார எஸ்டேட் பகுதியில் காட்டு யானைகளின் நடமாட்டம் என்பது வழக்கமான ஒன்று தான் என்றாலும், கூட்டமாக வரும் யானைகள், வீடுகள், மளிகை கடைகள், பள்ளி சத்துணவு கூடங்கள் மற்றும் ரேசன் கடைகளை சேதப்படுத்தி வரும் சம்பவங்கள் அதிகரித்து வருவது, பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று இரவு, வால்பாறை உருளிக்கல் எஸ்டேட் பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி வளாகம் அருகே சுற்றித்திரிந்த 7 காட்டு யானைகள், பள்ளி சத்துணவு மையத்தின் சுவரை இடித்து சேதப்படுத்தியது.

பின்னர், அருகில் இருந்த ஒரு வீட்டின் தடுப்பு சுவரையும் இடித்துத் தள்ளியது.

யானைகளின் அட்டகாசம் குறித்து தகவல் அறிந்து வந்த வனத்துறையினர், காட்டு யானைகளை அப்பகுதியில் இருந்து விரட்டினர்.
சம்பவத்தை தொடர்ந்து, எஸ்டேட் பகுதிகளில் சுற்றித்திரியும் காட்டு யானைகளை அடர் வனத்துக்குள் துரத்த வேண்டும் என்று பகுதிகள் மக்கள் வனத்துறைக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
நேற்று இரவு, வால்பாறை உருளிக்கல் எஸ்டேட் பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி வளாகம் அருகே சுற்றித்திரிந்த 7 காட்டு யானைகள், பள்ளி சத்துணவு மையத்தின் சுவரை இடித்து சேதப்படுத்தியது.
பின்னர், அருகில் இருந்த ஒரு வீட்டின் தடுப்பு சுவரையும் இடித்துத் தள்ளியது.
யானைகளின் அட்டகாசம் குறித்து தகவல் அறிந்து வந்த வனத்துறையினர், காட்டு யானைகளை அப்பகுதியில் இருந்து விரட்டினர்.
சம்பவத்தை தொடர்ந்து, எஸ்டேட் பகுதிகளில் சுற்றித்திரியும் காட்டு யானைகளை அடர் வனத்துக்குள் துரத்த வேண்டும் என்று பகுதிகள் மக்கள் வனத்துறைக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.