வால்பாறையில் ஊராட்சி துவக்கப் பள்ளியின் சத்துணவு கூடத்தின் சுவரை இடித்து சேதப்படுத்திய யானைக் கூட்டம்

நேற்று இரவு, வால்பாறை உருளிக்கல் எஸ்டேட் பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி வளாகம் அருகே சுற்றித்திரிந்த 7 காட்டு யானைகள், பள்ளி சத்துணவு மையத்தின் சுவரை இடித்து சேதப்படுத்தியது.


கோவை: கோவை மாவட்டம் வால்பாறை சுற்றுவட்டார எஸ்டேட் பகுதியில் காட்டு யானைகளின் நடமாட்டம் என்பது வழக்கமான ஒன்று தான் என்றாலும், கூட்டமாக வரும் யானைகள், வீடுகள், மளிகை கடைகள், பள்ளி சத்துணவு கூடங்கள் மற்றும் ரேசன் கடைகளை சேதப்படுத்தி வரும் சம்பவங்கள் அதிகரித்து வருவது, பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று இரவு, வால்பாறை உருளிக்கல் எஸ்டேட் பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி வளாகம் அருகே சுற்றித்திரிந்த 7 காட்டு யானைகள், பள்ளி சத்துணவு மையத்தின் சுவரை இடித்து சேதப்படுத்தியது.



பின்னர், அருகில் இருந்த ஒரு வீட்டின் தடுப்பு சுவரையும் இடித்துத் தள்ளியது.



யானைகளின் அட்டகாசம் குறித்து தகவல் அறிந்து வந்த வனத்துறையினர், காட்டு யானைகளை அப்பகுதியில் இருந்து விரட்டினர்.

சம்பவத்தை தொடர்ந்து, எஸ்டேட் பகுதிகளில் சுற்றித்திரியும் காட்டு யானைகளை அடர் வனத்துக்குள் துரத்த வேண்டும் என்று பகுதிகள் மக்கள் வனத்துறைக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

Newsletter

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...