தமிழக அரசு விளம்பர அரசாகவே தான் உள்ளது-கோவையில் தமிழ்நாடு விவசாய சங்கம் உழவர் உழைப்பாளர் கட்சி தலைவர் செல்லமுத்து பேட்டி..!

தமிழக அரசு விவசாயிகளுக்கு அறிவித்த சலுகை இன்னும் வந்து சேரவில்லை எனவும், தமிழக அரசு விளம்பர அரசாகவே தான் உள்ளது எனவும், தமிழ்நாடு விவசாய சங்கம் உழவர் உழைப்பாளர் கட்சி தலைவர் செல்லமுத்து பேட்டியளித்துள்ளார்.


கோவை: தமிழக அரசு விளம்பர அரசாகவே தான் உள்ளது என கோவையில் தமிழ்நாடு விவசாய சங்கம் உழவர் உழைப்பாளர் கட்சி தலைவர் செல்லமுத்து பேட்டியளித்துள்ளார்.

தமிழ்நாடு விவசாய சங்கம் உழவர் உழைப்பாளர் கட்சி தலைவர் செல்லமுத்து, கோவையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், கடந்த காலத்தில் மின் கட்டண குறைப்பு மற்றும் கடன் நிவாரணம் கோரியும் நடத்தப்பட்ட போராட்டத்தில், உயிரிழந்தவர்களுக்கு ஜூலை 5-ம் தேதி தியாகிகள் தினமாக அனுசரிக்கப்பட்டு வரும் நிலையில், இவ்வாண்டு தொண்டாமுத்தூர் பகுதியில்அந்நிகழ்வு அனுசரிக்கப்படுகிறது என தெரிவித்தார்.

மேலும், இந்நிகழ்வில் பல்வேறு விவசாய பொருட்கள் விலை குறைவிற்கு அரசு நிவாரணம் கிடைக்கவில்லையென்றால் போராட்ட அறிவிப்பை அறிவிக்க உள்ளதாகவும் கூறினார். மேலும், மழைக்காலங்களில் தூருவார படாத இடங்களையெல்லாம் தூருவார வேண்டும் என கேட்டுக்கொண்டார். இந்த கூட்டத்திற்கு அனைத்து விவசாயிகளும் தவறாமல் வந்து கலந்து கொள்ள வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

மேலும், தமிழக அரசு வெறும் விளம்பர அரசாக தான் இருக்கிறது எனவும், விவசாயிகளுக்காக பட்ஜெட் போடுவதாகக் கூறும் போது அதை வரவேற்றதாகவும், ஆனால் இது வரை விவசாயிகளின் நிலத்திற்கு ஒரு ரூபாய் சலுகை கூட வரவில்லை என்பது தான் உண்மை என தெரிவித்தார்.

மேலும், பம்புசெட் உற்பத்தியாளர்களுக்கு ஜிஎஸ்டி வரியை உயரத்தினால் அது விவசாயிகள் தலையில்தான் விடியும் என்றும் பம்புசெட் மீதான ஜிஎஸ்டி வரியை நீக்க வேண்டுமென கேட்டுக் கொள்வதாக தெரிவித்தார்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...