கோவை வாளையாறு அருகே நெடுஞ்சாலையில் கேரளா நோக்கிச் சென்ற “ஸ்பிரிட்” லோடு ஏற்றி வந்த டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்து..!

விபத்து தொடர்பாக கே ஜி சாவடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதிகாலையில் நடந்த விபத்தில் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது.


கோவை: கோவை வாளையாறு அருகே நெடுஞ்சாலையில் கேரளா நோக்கிச் சென்ற “ஸ்பிரிட்” லோடு ஏற்றி வந்த டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது.

ஆந்திரா மாநிலத்தில் இருந்து மது உற்பத்தி ஆலைக்கு சுத்த ஆல்கஹால் எனப்படும் “ஸ்பிரிட்” ஏற்றிக்கொண்டு 9-டேங்கர் லாரிகள் கோவை வழியாக கேரளா நோக்கி சென்றுள்ளது.

இந்நிலையில், இன்று அதிகாலை 7-லாரிகள் வாளையாறை கடந்து சென்ற நிலையில், பின்னால் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த பார்த்திபன் (40) என்பவர், 25,000-லிட்டர் ஸ்பிரிட் லோடுடன் ஓட்டி வந்த டேங்கர் லாரி வாளையாறு தனியார் கல்லூரி அருகே வந்தபோது, நெடுஞ்சாலை பராமரிப்பு பணிக்காக வைக்கப்பட்ட மணல் மூட்டைகள் மீது முதல் இருக்க வலது புறத்தில் லேசாக வண்டியைத் இருப்பதாக தெரிகிறது.



அப்போது, பின்னால் வந்த மற்றொரு டேங்கர் லாரி பார்த்திபன் ஓட்டி வந்த டேங்கர் லாரி மீது மோதியது, இதில், நிலைதடுமாறிய முன்னால் சென்ற லாரி சாலையில் கவிழ்ந்தது. இதையடுத்து, டேங்கர் லாரியில் இருந்து ஸ்பிரிட் கசிந்து தீ விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டது.

பின்னர், தகவலறிந்து சம்பவ இடத்திற்கு தீயணைப்பு துறையின் உடன் சென்ற கே ஜி சாவடி போலீசார் உடனடியாக பாதுகாப்பு நடவடிக்கையை மேற்கொண்டனர். இதையடுத்து, பாலக்காடு நெடுஞ்சாலையில் வந்த வாகனங்கள் சர்வீஸ் சாலை வழியாக அனுப்பப்பட்டது.



மேலும், அருகாமையில் யாரும் வராத அளவு பாதுகாப்பு போடப்பட்டு, பொக்லின் வாகனம் மூலம் டேங்கர் லாரி நிறுத்தப்பட்டது. இந்த விபத்தில், ஓட்டுநர் பார்த்திபன் லேசான காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

2-லாரிகளில் தற்போது பழுது பார்க்கும் பணி நடைபெற்று வருகிறது. மேலும், விபத்து தொடர்பாக கே ஜி சாவடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதிகாலையில் நடந்த விபத்தில் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது.

Newsletter

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...