மாணவி பயிலும் பள்ளியின் தலைமை ஆசிரியர், குழந்தைகள் நல பாதுகாப்பு அமைப்புக்கு தகவல் தெரிவித்ததை அடுத்து, பேரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் பதிவு செய்யப்பட்டது. விசாரணையின் முடிவில், மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த நபரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
கோவை: கோவையில் 11 ஆம் வகுப்பு படித்து வந்த மாணவிக்கு, பாலியல் தொல்லை அளித்த நபரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.
கோவையை சேர்ந்த 38 வயது பெண் ஒருவருக்கு மகள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். கடந்த 10 வருடங்களுக்கு முன்பு இவரது கணவர் உயிரிழந்ததாக கூறப்படும் நிலையில், அந்த பெண்ணுக்கு அதே பகுதியை சேர்ந்த 48 வயதுடைய பெயிண்டர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டதுள்ளது.
இருவரும் திருமணம் செய்து கொள்ளாமல் கணவன்-மனைவியாக, குழந்தைகளுடன் ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளனர். அந்த பெண்ணின் மகள் தற்போது பிளஸ்-1 படித்து வருகிறார். ஒரே வீட்டில் அனைவரும் வசித்து வந்த நிலையில், அந்த பெண்ணின் தாயுடன் பழகி வந்த நபர், மாணவியிடம் ஆபாச வீடியோக்களை காண்பித்து பலமுறை பாலியல் வன்கொடுமை செய்து வந்ததாக தெரிகிறது.
இது குறித்து மாணவி தனது தாயிடம் கூறியும், அவர் கண்டுகொள்ளாமல் இருந்துள்ளார். இதனால் செய்வதறியாது தவித்த மாணவி, நாளுக்கு நாள் அந்த நபரின் அத்துமீறல்கள் அதிகரித்து வந்ததால், இது குறித்து அவரது பள்ளி தலைமை ஆசிரியையிடம் தெரிவித்துள்ளார்.
பாதிக்கப்பட்ட மாணவி சொல்வதை கேட்டு அதிர்ச்சியடைந்த, தலைமை ஆசிரியர், உடனடியாக சம்பவம் குறித்து குழந்தைகள் நல பாதுகாப்பு அமைப்புக்கு தகவல் தெரிவித்தார். பின்னர், அவர்கள் பேரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர்.
புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட போலீசார், வழக்குப்பதிவு செய்து பிளஸ்-1 மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த அந்த நபர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இதனை தொடர்ந்து, அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
கோவையை சேர்ந்த 38 வயது பெண் ஒருவருக்கு மகள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். கடந்த 10 வருடங்களுக்கு முன்பு இவரது கணவர் உயிரிழந்ததாக கூறப்படும் நிலையில், அந்த பெண்ணுக்கு அதே பகுதியை சேர்ந்த 48 வயதுடைய பெயிண்டர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டதுள்ளது.
இருவரும் திருமணம் செய்து கொள்ளாமல் கணவன்-மனைவியாக, குழந்தைகளுடன் ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளனர். அந்த பெண்ணின் மகள் தற்போது பிளஸ்-1 படித்து வருகிறார். ஒரே வீட்டில் அனைவரும் வசித்து வந்த நிலையில், அந்த பெண்ணின் தாயுடன் பழகி வந்த நபர், மாணவியிடம் ஆபாச வீடியோக்களை காண்பித்து பலமுறை பாலியல் வன்கொடுமை செய்து வந்ததாக தெரிகிறது.
இது குறித்து மாணவி தனது தாயிடம் கூறியும், அவர் கண்டுகொள்ளாமல் இருந்துள்ளார். இதனால் செய்வதறியாது தவித்த மாணவி, நாளுக்கு நாள் அந்த நபரின் அத்துமீறல்கள் அதிகரித்து வந்ததால், இது குறித்து அவரது பள்ளி தலைமை ஆசிரியையிடம் தெரிவித்துள்ளார்.
பாதிக்கப்பட்ட மாணவி சொல்வதை கேட்டு அதிர்ச்சியடைந்த, தலைமை ஆசிரியர், உடனடியாக சம்பவம் குறித்து குழந்தைகள் நல பாதுகாப்பு அமைப்புக்கு தகவல் தெரிவித்தார். பின்னர், அவர்கள் பேரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர்.
புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட போலீசார், வழக்குப்பதிவு செய்து பிளஸ்-1 மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த அந்த நபர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இதனை தொடர்ந்து, அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.