கோவையில் 11 ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் வன்கொடுமை; தாயின் ஆண் நண்பர் போக்சோவில் கைது….!

மாணவி பயிலும் பள்ளியின் தலைமை ஆசிரியர், குழந்தைகள் நல பாதுகாப்பு அமைப்புக்கு தகவல் தெரிவித்ததை அடுத்து, பேரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் பதிவு செய்யப்பட்டது. விசாரணையின் முடிவில், மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த நபரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.


கோவை: கோவையில் 11 ஆம் வகுப்பு படித்து வந்த மாணவிக்கு, பாலியல் தொல்லை அளித்த நபரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.

கோவையை சேர்ந்த 38 வயது பெண் ஒருவருக்கு மகள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். கடந்த 10 வருடங்களுக்கு முன்பு இவரது கணவர் உயிரிழந்ததாக கூறப்படும் நிலையில், அந்த பெண்ணுக்கு அதே பகுதியை சேர்ந்த 48 வயதுடைய பெயிண்டர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டதுள்ளது.

இருவரும் திருமணம் செய்து கொள்ளாமல் கணவன்-மனைவியாக, குழந்தைகளுடன் ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளனர். அந்த பெண்ணின் மகள் தற்போது பிளஸ்-1 படித்து வருகிறார். ஒரே வீட்டில் அனைவரும் வசித்து வந்த நிலையில், அந்த பெண்ணின் தாயுடன் பழகி வந்த நபர், மாணவியிடம் ஆபாச வீடியோக்களை காண்பித்து பலமுறை பாலியல் வன்கொடுமை செய்து வந்ததாக தெரிகிறது.

இது குறித்து மாணவி தனது தாயிடம் கூறியும், அவர் கண்டுகொள்ளாமல் இருந்துள்ளார். இதனால் செய்வதறியாது தவித்த மாணவி, நாளுக்கு நாள் அந்த நபரின் அத்துமீறல்கள் அதிகரித்து வந்ததால், இது குறித்து அவரது பள்ளி தலைமை ஆசிரியையிடம் தெரிவித்துள்ளார்.

பாதிக்கப்பட்ட மாணவி சொல்வதை கேட்டு அதிர்ச்சியடைந்த, தலைமை ஆசிரியர், உடனடியாக சம்பவம் குறித்து குழந்தைகள் நல பாதுகாப்பு அமைப்புக்கு தகவல் தெரிவித்தார். பின்னர், அவர்கள் பேரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர்.

புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட போலீசார், வழக்குப்பதிவு செய்து பிளஸ்-1 மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த அந்த நபர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இதனை தொடர்ந்து, அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Newsletter

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...