அமெரிக்க வரி தொடர்பான பயிற்சி அளிக்க ஜிகேஎம் ஒப்பந்தம்..!

ஜிகேஎம் குளோபல் சர்வீஸஸ் பிரைவேட் லிமிடெட், அமெரிக்க வருமான வரி சம்பந்தமான சிறப்பு பயிற்சியளிக்க ஹேப்பி வேலி பிஸினஸ் ஸ்கூல் உடன் ஒப்பந்தக் கையெழுத்திட்டது.


கோவை: இந்தியாவிலிருந்து சேவை அளிக்க உதவும் என எதிர்பார்க்கலாம். அமெரிக்கா மற்றும் இந்திய வரி ஆலோசனை சேவைகளில் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக இந்தியாவிலும் அமெரிக்காவிலும் ஜிகேஎம் நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

அமெரிக்காவின் வருமான வரிக்கணக்கு தயாரிப்பு மற்றும் வரி சேவைக்கான பயிற்சியை, கற்க விரும்பும் மாணவர்களுக்கு அளித்து, சான்றிதழ் வழங்க ஜிகேஎம் ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில், ஜிகேஎம் நிறுவனர் ஜி. கார்த்திகேயன் மற்றும் ஹேப்பி வேலி பி.ஸ்கூல் தலைவர் டாக்டர் கனகராஜ் ஆகியோர் கையெழுத்திட்டனர்.

இந்த சான்றிதழ் படிப்பானது, அமெரிக்காவில் வரி செலுத்தும் தனி நபர்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் வரி சம்பந்தமான சேவைகளுக்கான வேலை வாய்ப்பை இந்தியாவிலும் அமெரிக்காவிலும் பெற உதவிகரமாக இருக்கும்.

இந்த இணைப்பின் சிந்தனைகளை பகிர்ந்து கொண்ட ஜி.கார்த்திகேயன் கூறுகையில், "இந்தியாவிலிருந்து அமெரிக்காவிற்கு நிதி, வரி சம்பந்தமான சேவை வாய்ப்புகள் அதிகரித்து வருகிறது. இதற்கான வேலை வாய்ப்புக்களும் இந்தியாவிலும் அமெரிக்காவிலும் அதிக அளவில் அதிகரித்து வருகிறது.

அதற்கு தேவையான பயிற்சியையும், ஊக்கத்தையும் அளிக்கும் வகையில் சான்றிதழ் பட்ட திட்டம் துவங்கியுள்ளோம். மூன்று மாத காலம் நடத்தப்படும் இந்த பயிற்சியில் தேர்வு பெறுபவர்கள் ஜிகேஎம் நிறுவனத்திலும் இந்தியாவின் மற்ற முன்னணி நிறுவனங்களிலும் உடனடி வேலைவாய்ப்பு பெறுவார்கள்.

இந்த ஒப்பந்தம் சிறப்பு வணிக கல்வி நிறுவனமான ஹேப்பி வேலி பி.ஸ்கூல், உடன் ஏற்படுத்தப்பட்டது இளைஞர்களின் திறனை மேம்படுத்தி அவர்களின் சிறந்த எதிர்கால கனவுகளை அடைய உதவும்.

ஹேப்பி வேலி வணிக கல்வி நிறுவனத்தின் தலைவர் டாக்டர் கனகராஜ் கூறுகையில், "ஜிகேஎம் நிறுவனத்துடன் எங்கள் கல்வி நிறுவனம் ஒரு நல்ல கல்வி உறவை கொண்டுள்ளது. கடந்த பல ஆண்டுகளில் நுாற்றுக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு இந்த நிறுவனம் பயிற்சி அளித்து, ஜிகேஎம் நிறுவனத்தில் மட்டுமின்றி பல்வேறு இந்தியாவின் முன்னணி நிறுவனங்களில் வேலை வாய்ப்புகளை பெற்றுத்தந்துள்ளது.

அமெரிக்க வரி முறை கணக்கீட்டில் மேலும், பல பணியாளர்களின் தேவையை கருத்தில் கொண்டு, மேலும், பல மாணவர்களுக்கு ஜிகேஎம் நிறுவனத்துடன் இணைந்து இந்த துறையில் பயிற்சி அளிக்க, இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளோம்," என்றார்.

Newsletter

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...