கோவை பொள்ளாச்சி நகராட்சியில் கடந்த அதிமுக ஆட்சியில் செயல்படுத்தாத பாதாள சாக்கடை திட்டப் பணிகள் விரைந்து முடிக்கப்படும்..!

பொள்ளாச்சி நகராட்சியில் கடந்த அதிமுக ஆட்சியில் செயல்படுத்தாத பாதாள சாக்கடை திட்டப் பணிகள் விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என நகராட்சி தலைவி சியாமளா நவநீதகிருஷ்ணன் உறுதியளித்துள்ளார்.


கோவை: பொள்ளாச்சி நகராட்சி அலுவலகத்தில் நகராட்சி கவுன்சிலர்கள் கூட்டம் நடைபெற்றது நகராட்சி தலைவி சியாமளா நவநீதகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் பொள்ளாச்சி நகரப் பகுதியில் தெருவிளக்குகள், சாலை வசதி, குடிநீர் வசதி உள்ளிட்ட பல்வேறு அடிப்படை தேவைகள் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. மேலும், மக்கள் நலத் திட்டங்களுக்கு 30-தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.



நகராட்சியில், கடந்த அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட பாதாள சாக்கடை திட்டத்தை முழுமையாக செயல்படுத்தாததால் தார் சாலைகள் குண்டும் குழியுமாக காணப்பட்டு பொதுமக்கள் பல்வேறு சிரமங்களுக்கு உள்ளாகி வருவதாக பணிகளை விரைந்து முடிக்க கவுன்சிலர்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதுகுறித்து, நகராட்சி தலைவி சியாமளா நவநீதகிருஷ்ணன் அளித்த பேட்டியின் போது, கடந்த அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட பாதாள சாக்கடை திட்டப் பணிகள் தொடங்கப்பட்டு முழுமையாக நிறைவேற்றப்படாததால் பெரும்பாலான வார்டுகளில் சாலைகள் குண்டும் குழியுமாக காணப்படுவதாகவும், அதேபோல் ஆளிறங்கு குழிகளுக்கு போடப்பட்ட ஸ்லாப்புகள் சேதமடைந்துள்ளதாக தொடர்ந்து புகார்கள் வந்து கொண்டிருப்பதாக குற்றம் சாட்டிய நகராட்சி தலைவி தற்போது, திமுக ஆட்சி பொறுப்பேற்றவுடன் சாலைகள் மற்றும் திட்ட பணிகளை முடிக்க அரசு நிதி ஒதுக்கி வருவதால் பணிகள் நடைபெற்று வருகிறது.

பணிகள் நிறைவு பெற்று வீட்டு இணைப்புகள் வழங்கப்பட்டவுடன் விரைவில், இத்திட்டம் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என்று உறுதி அளித்தார்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...