கோவையில் மீண்டும் பயன்பாட்டுக்கு வந்த கொரோனா 'கண்ட்ரோல் ரூம்' 24×7 அழைக்கலாம்..!

கொரோனா கட்டுப்பாட்டு அறையை 0422-2300132, 0422-2302323 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு கொரோனா நோய் குறித்த சந்தேகங்களையும், உடல் ஆரோக்கியம் மற்றும் தடுப்பூசி செலுத்தும் இடங்களின் விபரங்களைக் கேட்டு தெரிந்து கொள்ளலாம்.


கோவை: கோவை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் மாநகராட்சி நிர்வாகம் பல்வேறு வகையில் நோய் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.

சில நாட்களுக்கு முன்னர் கோவை மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் மீண்டும் முகக்கவசம் கட்டாயமாக்கப்பட்டது. இதை ஒரு சிலர் மட்டும் கடைபிடித்து வருகின்றனர். பெரும்பாலானவர்கள் கட்டாய முகக்கவச உத்தரவைக் கண்டுகொள்ளாமல் இருப்பது கொரோனா நோயின் மூன்றாவது அலை வருவதற்கு வழி வகை செய்வது போல உள்ளது.

இதனால், கோவை மாநகராட்சி நிர்வாகம் நோய் தடுப்பு வழிமுறைகளை பொது மக்களிடம் கொண்டு சேர்க்க முயற்சி செய்து வருகிறது. பொதுமக்கள் அதிகம் கூடும் பேருந்து நிறுத்தம், திரையரங்கம், மற்றும் வணிக வளாகங்கள், போன்ற இடங்களில் முகக்கவசம் அணியாதவர்களிடம்அபராதம் வசூலிக்கப்படுகிறது.

கொரோனா நோய் முதல் மற்றும் இரண்டாவது அலையின்தாக்கம் வந்த போது மாநகராட்சியின் பிரதான அலுவலகத்தில் 24-மணி நேரமும் கொரோனா [கண்ட்ரோல் ரூம்] கட்டுப்பாட்டு அறை செயல்பட்டு வந்தது.

இந்நிலையில், தற்போது மீண்டும் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது என்று இதன் பொறுப்பாளர் முகுந்தன் கூறினார். மேலும், கொரோனா கட்டுப்பாட்டு அறையை 0422 2300132, 0422-2302323 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு கொரோனா நோய் குறித்த சந்தேகங்களையும், உடல் ஆரோக்கியம் மற்றும் தடுப்பூசி செலுத்தும் இடங்களின் விபரங்களைக் கேட்டு தெரிந்து கொள்ளலாம்.

அவர்களின் குறைகளை கண்டறிந்து உடனடியாக தீர்வு கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றார். எனவே கொரோனா நோய் குறித்து பொதுமக்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால் கண்ட்ரோல் ரூம் தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...