கொரோனா கட்டுப்பாட்டு அறையை 0422-2300132, 0422-2302323 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு கொரோனா நோய் குறித்த சந்தேகங்களையும், உடல் ஆரோக்கியம் மற்றும் தடுப்பூசி செலுத்தும் இடங்களின் விபரங்களைக் கேட்டு தெரிந்து கொள்ளலாம்.
கோவை: கோவை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் மாநகராட்சி நிர்வாகம் பல்வேறு வகையில் நோய் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.
சில நாட்களுக்கு முன்னர் கோவை மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் மீண்டும் முகக்கவசம் கட்டாயமாக்கப்பட்டது. இதை ஒரு சிலர் மட்டும் கடைபிடித்து வருகின்றனர். பெரும்பாலானவர்கள் கட்டாய முகக்கவச உத்தரவைக் கண்டுகொள்ளாமல் இருப்பது கொரோனா நோயின் மூன்றாவது அலை வருவதற்கு வழி வகை செய்வது போல உள்ளது.
இதனால், கோவை மாநகராட்சி நிர்வாகம் நோய் தடுப்பு வழிமுறைகளை பொது மக்களிடம் கொண்டு சேர்க்க முயற்சி செய்து வருகிறது. பொதுமக்கள் அதிகம் கூடும் பேருந்து நிறுத்தம், திரையரங்கம், மற்றும் வணிக வளாகங்கள், போன்ற இடங்களில் முகக்கவசம் அணியாதவர்களிடம்அபராதம் வசூலிக்கப்படுகிறது.
கொரோனா நோய் முதல் மற்றும் இரண்டாவது அலையின்தாக்கம் வந்த போது மாநகராட்சியின் பிரதான அலுவலகத்தில் 24-மணி நேரமும் கொரோனா [கண்ட்ரோல் ரூம்] கட்டுப்பாட்டு அறை செயல்பட்டு வந்தது.
இந்நிலையில், தற்போது மீண்டும் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது என்று இதன் பொறுப்பாளர் முகுந்தன் கூறினார். மேலும், கொரோனா கட்டுப்பாட்டு அறையை 0422 2300132, 0422-2302323 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு கொரோனா நோய் குறித்த சந்தேகங்களையும், உடல் ஆரோக்கியம் மற்றும் தடுப்பூசி செலுத்தும் இடங்களின் விபரங்களைக் கேட்டு தெரிந்து கொள்ளலாம்.
அவர்களின் குறைகளை கண்டறிந்து உடனடியாக தீர்வு கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றார். எனவே கொரோனா நோய் குறித்து பொதுமக்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால் கண்ட்ரோல் ரூம் தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சில நாட்களுக்கு முன்னர் கோவை மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் மீண்டும் முகக்கவசம் கட்டாயமாக்கப்பட்டது. இதை ஒரு சிலர் மட்டும் கடைபிடித்து வருகின்றனர். பெரும்பாலானவர்கள் கட்டாய முகக்கவச உத்தரவைக் கண்டுகொள்ளாமல் இருப்பது கொரோனா நோயின் மூன்றாவது அலை வருவதற்கு வழி வகை செய்வது போல உள்ளது.
இதனால், கோவை மாநகராட்சி நிர்வாகம் நோய் தடுப்பு வழிமுறைகளை பொது மக்களிடம் கொண்டு சேர்க்க முயற்சி செய்து வருகிறது. பொதுமக்கள் அதிகம் கூடும் பேருந்து நிறுத்தம், திரையரங்கம், மற்றும் வணிக வளாகங்கள், போன்ற இடங்களில் முகக்கவசம் அணியாதவர்களிடம்அபராதம் வசூலிக்கப்படுகிறது.
கொரோனா நோய் முதல் மற்றும் இரண்டாவது அலையின்தாக்கம் வந்த போது மாநகராட்சியின் பிரதான அலுவலகத்தில் 24-மணி நேரமும் கொரோனா [கண்ட்ரோல் ரூம்] கட்டுப்பாட்டு அறை செயல்பட்டு வந்தது.
இந்நிலையில், தற்போது மீண்டும் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது என்று இதன் பொறுப்பாளர் முகுந்தன் கூறினார். மேலும், கொரோனா கட்டுப்பாட்டு அறையை 0422 2300132, 0422-2302323 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு கொரோனா நோய் குறித்த சந்தேகங்களையும், உடல் ஆரோக்கியம் மற்றும் தடுப்பூசி செலுத்தும் இடங்களின் விபரங்களைக் கேட்டு தெரிந்து கொள்ளலாம்.
அவர்களின் குறைகளை கண்டறிந்து உடனடியாக தீர்வு கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றார். எனவே கொரோனா நோய் குறித்து பொதுமக்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால் கண்ட்ரோல் ரூம் தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.