கோவை காவல் ஆணையர் அமல்ராஜுக்கு கண்டனம் தெரிவித்த கேம்பஸ் பிரண்ட் ஆப் இந்தியா மாணவர் சங்கம்


ஜல்லிக்கட்டிற்கான மாணவர்களின் போராட்டத்தை கேம்பஸ் பிரண்ட் ஆப் இந்தியா உள்ளிட்ட மாணவர் அமைப்பினர் திசைதிருப்பியதாக கோவை மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ் கூறியுள்ளதற்கு அந்த அமைப்பினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.



ஜல்லிகட்டு மீதான தடையை நீக்கி நிரந்தர சட்டம் கொண்டுவர வலியுறுத்தி தமிழகம் முழுவதும் மாணவர்கள் மற்றும் இளைஞர்களுடன் பொதுமக்களும் இணைந்து போராட்டம் நடத்தினர். இந்நிலையில் போராட்டத்தை கை விடுமாறு காவல்துறையினர் போராட்டகாரர்களிடம் வேண்டுகோள் விடுத்தனர்.

ஆனால், போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து செல்ல மறுத்ததையடுத்து காவல் துறையினர் பொதுமக்கள், இளைஞர்கள், மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தி போராட்டத்தை கலைத்தனர்.

இதனையடுத்து தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் வன்முறை சம்பவங்கள் நடந்தது. இந்த நிலையில் கோவை மாநகர காவல்துறை ஆணையர் அமல்ராஜ் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கேம்பஸ் பிரண்ட் ஆப் இந்தியா உள்ளிட்ட சில மாணவ அமைப்புகள் மாணவர்களின் போராட்டத்தை திசைதிருப்பியதாக தெரிவித்தார்.

மாநகர காவல் ஆணையர் அமல்ராஜின் இத்தகைய பேச்சுக்கு அந்த அமைப்பின் மாநில பொதுச்செயலாளர் அப்துர் ரகுமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மேலும், கேம்பஸ் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் மீது காவல் துறை ஆணையர் அமல்ராஜ் அவதூறு பரப்பும் விதத்தில் பேசியதாகவும், அவர் மீது சட்ட ரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளதாகவும் கூறிய அவர், தமிழக அரசு அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

Newsletter

தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: நாளை தமிழ்நாட்டின் வீடுகள், வீதிகளில் கருப்புக் கொடி பறக்கட்டும் - முதல்வர் முக ஸ்டாலின்..!

மத்திய அரசு கொண்டு வரத் திட்டமிட்டுள்ள தொகுதி மறுசீரமைப்பு (Delimitation) திட்டத்திற்கு எதிராக திமுக தலைமையிலான கூட்டணி...

பொள்ளாச்சி அருகே கட்டுப்பாட்டை இழந்த லாரி மோதி ஒருவர் உயிரிழப்பு!

பொள்ளாச்சி- கோவை வடக்கிபாளையம் பிரிவு அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டைஇழந்த லாரி சாலையோர வாகனங்கள், மின்கம்பங்களில் மோதி க...

வால்பாறை சட்டமன்ற தொகுதி: சபரீசன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் – திமுக நிர்வாகிகள் பங்கேற்பு

கோவை தெற்கு தொகுதி வேட்பாளர் செந்தில் பாலாஜி, வால்பாறை மற்றும் பொள்ளாச்சி தொகுதி பார்வையாளர் டாக்டர் மகேந்திரன், வேட்பாள...

குனியமுத்தூர் இடையர்பாளையம் பகுதியில் சிலம்பம் சுழற்றி வாக்கு சேகரித்த முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

கோவை குனியமுத்தூர் இடையர்பாளையம் பகுதியில் தொண்டாமுத்தூர் தொகுதி AIADMK வேட்பாளர் மற்றும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலும...

கோவையில் அதிகரிக்கும் டிஜிட்டல் அரஸ்ட் மோசடி - 73 வயது முதியவர் ₹42 லட்சம் கேட்டு மிரட்டல்

கோவையில் 73 வயது ஓய்வு பெற்ற அதிகாரியை CBI அதிகாரி என்று கூறி மோசடி செய்ய முயன்றனர். டிஜிட்டல் அரஸ்ட் என்று மிரட்டி ₹42...

திமுக ஆட்சியில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளன - அண்ணாமலை குற்றச்சாட்டு

திருப்பூர் மடத்துக்குளம் தொகுதியில் பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை வாக்கு சேகரிப்பின் போது, திமுக ஆட்சியில் பெண்களு...