மேற்கு தொடர்ச்சி மலைகளில் தென்மேற்கு பருவமழை தொடங்கி உள்ளதால், கவியருவியின் நீர் பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால், கவி அருவியில் தற்போது வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது.
கோவை: பொள்ளாச்சியை அடுத்த மேற்குத் தொடர்ச்சி மலைகளில் கனமழை, ஆழியாறு கவி அருவி மற்றும் கோபால்சாமி மலை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியாறு கவியருவி கோவை மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்று. இங்கு விடுமுறை மற்றும் பண்டிகை காலங்களில் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.
வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கவியருவி கொரோனா மற்றும் வறட்சி காரணமாக கடந்த ஜனவரி மாதம் மூடப்பட்டு, இதுவரை திறக்கப்படாமல் உள்ளது. இந்நிலையில், மேற்குத் தொடர்ச்சி மலைகளில் தென்மேற்கு பருவமழை தொடங்கி உள்ளதால், கவியருவியின் நீர் பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
இதனால், கவி அருவியில் தற்போது வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டி வருகிறது. வறட்சி காரணமாக தண்ணீர் இன்றி காணப்பட்ட அருவியில், தண்ணீர் வரத் தொடங்கியுள்ளதால், காற்று வெள்ளம் குறைந்தவுடன் அருவி மீண்டும் திறக்கப்படும் என சுற்றுலாப் பயணிகள் எதிர்பார்த்து உள்ளனர்.

இதனிடையே, நேற்று மதியம் முதல் கனமழை பெய்ததால் பொள்ளாச்சியை அடுத்துள்ள அங்கலகுறிச்சி கோபால்சாமி மலை நீர் பிடிப்பு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இதனால், கோபால்சாமி மலை தடுப்பணையில் தண்ணீர் நிரம்பி மலை முகடுகளில் இருந்து அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. கோபால்சாமி மலையில் இருந்து அருகில் தண்ணீர் கொட்டும் காட்சியை அந்த வழியாக ஆழியாறு செல்லும் சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசிப்பதுடன், வீடியோ பதிவுகளை சமூக வலைத்தளங்களில் வைரல் ஆக்கி வருகின்றனர்.
பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியாறு கவியருவி கோவை மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்று. இங்கு விடுமுறை மற்றும் பண்டிகை காலங்களில் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.
வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கவியருவி கொரோனா மற்றும் வறட்சி காரணமாக கடந்த ஜனவரி மாதம் மூடப்பட்டு, இதுவரை திறக்கப்படாமல் உள்ளது. இந்நிலையில், மேற்குத் தொடர்ச்சி மலைகளில் தென்மேற்கு பருவமழை தொடங்கி உள்ளதால், கவியருவியின் நீர் பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
இதனால், கவி அருவியில் தற்போது வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டி வருகிறது. வறட்சி காரணமாக தண்ணீர் இன்றி காணப்பட்ட அருவியில், தண்ணீர் வரத் தொடங்கியுள்ளதால், காற்று வெள்ளம் குறைந்தவுடன் அருவி மீண்டும் திறக்கப்படும் என சுற்றுலாப் பயணிகள் எதிர்பார்த்து உள்ளனர்.
இதனிடையே, நேற்று மதியம் முதல் கனமழை பெய்ததால் பொள்ளாச்சியை அடுத்துள்ள அங்கலகுறிச்சி கோபால்சாமி மலை நீர் பிடிப்பு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இதனால், கோபால்சாமி மலை தடுப்பணையில் தண்ணீர் நிரம்பி மலை முகடுகளில் இருந்து அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. கோபால்சாமி மலையில் இருந்து அருகில் தண்ணீர் கொட்டும் காட்சியை அந்த வழியாக ஆழியாறு செல்லும் சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசிப்பதுடன், வீடியோ பதிவுகளை சமூக வலைத்தளங்களில் வைரல் ஆக்கி வருகின்றனர்.