கோவை பொள்ளாச்சியை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலைகளில் கனமழை, ஆழியாறு கவி அருவி மற்றும் கோபால்சாமி மலை அருவியில் வெள்ளப்பெருக்கு..!

மேற்கு தொடர்ச்சி மலைகளில் தென்மேற்கு பருவமழை தொடங்கி உள்ளதால், கவியருவியின் நீர் பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால், கவி அருவியில் தற்போது வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது.


கோவை: பொள்ளாச்சியை அடுத்த மேற்குத் தொடர்ச்சி மலைகளில் கனமழை, ஆழியாறு கவி அருவி மற்றும் கோபால்சாமி மலை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியாறு கவியருவி கோவை மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்று. இங்கு விடுமுறை மற்றும் பண்டிகை காலங்களில் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.

வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கவியருவி கொரோனா மற்றும் வறட்சி காரணமாக கடந்த ஜனவரி மாதம் மூடப்பட்டு, இதுவரை திறக்கப்படாமல் உள்ளது. இந்நிலையில், மேற்குத் தொடர்ச்சி மலைகளில் தென்மேற்கு பருவமழை தொடங்கி உள்ளதால், கவியருவியின் நீர் பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

இதனால், கவி அருவியில் தற்போது வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டி வருகிறது. வறட்சி காரணமாக தண்ணீர் இன்றி காணப்பட்ட அருவியில், தண்ணீர் வரத் தொடங்கியுள்ளதால், காற்று வெள்ளம் குறைந்தவுடன் அருவி மீண்டும் திறக்கப்படும் என சுற்றுலாப் பயணிகள் எதிர்பார்த்து உள்ளனர்.



இதனிடையே, நேற்று மதியம் முதல் கனமழை பெய்ததால் பொள்ளாச்சியை அடுத்துள்ள அங்கலகுறிச்சி கோபால்சாமி மலை நீர் பிடிப்பு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

இதனால், கோபால்சாமி மலை தடுப்பணையில் தண்ணீர் நிரம்பி மலை முகடுகளில் இருந்து அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. கோபால்சாமி மலையில் இருந்து அருகில் தண்ணீர் கொட்டும் காட்சியை அந்த வழியாக ஆழியாறு செல்லும் சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசிப்பதுடன், வீடியோ பதிவுகளை சமூக வலைத்தளங்களில் வைரல் ஆக்கி வருகின்றனர்.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...

‘யாத்ரி சுவிதா திவஸ் 2026’ கொண்டாட்டம்: பயணிகள் சேவையில் அர்ப்பணிப்பை வெளிப்படுத்திய கோவை விமான நிலையம்

கோவை சர்வதேச விமான நிலையத்தில் யாத்ரி சுவிதா திவஸ் 2026 முன்னிட்டு கலாச்சார நிகழ்ச்சிகள், சுகாதார முகாம்கள், ரத்ததானம்,...

முத்தண்ணன்குளம் Turf மைதானத்துக்கான தனியாருடனான ஒப்பந்தத்தை மாநகராட்சி ரத்து செய்ய வேண்டும்: DYFI வலியுறுத்தல்

கோவை மாநகராட்சி சார்பில் ரூ.60 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட முத்தண்ணன்குளம் Turf மைதான தனியார் நிறுவனத்திடம் செய்த ஒப்பந்...

50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகள் ஆய்வு: ரூ.40 ஆயிரம் மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த ஆர்.எஸ்.புரம் போலீசார்..!

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள கனரா வங்கி அருகே தவறவிட்ட ரூ.40 ஆயிரத்தை, 50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆய்வு...

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பணியாற்றியவர்களுக்கு மாநில விருதுகள்: விண்ணப்பங்கள் வரவேற்பு

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக பணியாற்றிய தனிநபர்கள், தொண்டு நிறுவனங்கள், மருத்துவர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு த...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24-ல் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24 தேதிகளில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. 20...