கோவையில் 12 ஆம் வகுப்பு முடித்த காவலர்களின் குழந்தைகளுக்கான வழிகாட்டி நிகழ்ச்சி

"தழைக்கட்டும் நமது தலைமுறை-2022" என்ற தலைப்பிலான வழிகாட்டி நிகழ்ச்சியை கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் துவங்கி வைத்தார். மேற்கு மண்டலத்தை சேர்ந்த காவலர்கள் மற்றும் 12 ஆம் வகுப்பு பயிலும் அவர்களது மகன்/மகள் ஆகியோர் பங்கேற்றனர்.


கோவை: தமிழக முதல்வரின் வழிகாட்டுதலின் பேரில், தமிழ்நாடு காவல்துறை இயக்குனர், சைலேந்திரபாபு உத்தரவின் பேரில், தமிழ்நாடு காவல்துறை குடும்பத்தில் 12 ஆம் மாணவ, மாணவிகளுக்கான "தழைக்கட்டும் நமது தலைமுறை-2022" என்ற தலைப்பிலான வழிகாட்டி நிகழ்ச்சியை கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் இன்று துவங்கி வைத்தார்.



கோவை மாநகர பீளமேடு பகுதியில் உள்ள ஹிந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழ்நாடு காவல்துறை இயக்குனர், சைலேந்திரபாபு காணொளி காட்சி மூலம் மாணவ - மாணவிகள் மத்தியில் பேசினார்.



இந்நிகழ்ச்சியில், பல்வேறு கல்லூரி முனைவர்கள், பேச்சாளர்கள் கலந்துக் கொண்டு சிறப்புரையாற்றினர். இந்த நிகழ்ச்சியில், மேற்கு மண்டலத்தை சேர்ந்த காவல் துறையினர் குடும்பத்தை சேர்ந்த மாணவ, மாணவியர்கள் - 256 பேர், மற்றும் அவர்களது பெற்றோர்கள் - 357 பேர், என மொத்தம் 613 பேர் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.



நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, மாணவ - மாணவிகள் அவர்களது சந்தேகங்களை சிறப்பு விருந்தினர்களிடம் கேட்டு பயன் அடைந்தனர்.

Newsletter

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...