கொப்பரைக்கு குறைந்தபட்ச ஆதார விலையாக ரூ.150-வழங்க மத்திய அரசை தமிழக அரசு வலியுறுத்த வேண்டும். ரேஷன் கடையில் மானியத்துடன் வழங்கும் பாமாயிலுக்கு பதிலாக தேங்காய் எண்ணெய் வழங்க வேண்டும், உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாக தெரிவித்தனர்.
கோவை: தேங்காய் விலை வீழ்ச்சியை கட்டுப்படுத்த கோரி ஜூலை 13-ம் தேதி தமிழ்நாடு தென்னை உற்பத்தியாளர்கள் பொள்ளாச்சியில் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாக தெரிவித்தனர்.
தமிழகத்தில் கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் தென்னை விவசாயத்தை முதன்மையாக விவசாயிகள் செய்து வருகின்றனர். கடந்த பல மாதங்களாக தேங்காய் விலையில் கடுமையான வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதால், விவசாயிகள் மிகப்பெரிய பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர்.

இந்நிலையில், தமிழ்நாடு தென்னை உற்பத்தியாளர்கள் சங்க ஆலோசனைக் கூட்டம் பொள்ளாச்சியில் நடைபெற்றது. இதில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர். தமிழகத்தில் தேங்காய் விலை வீழ்ச்சியை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், நெல்லை அரசு கொள்முதல் செய்வது போல தென்னை விவசாயிகளிடம் இருந்து நேரடியாக குறைந்தபட்ச ஆதார விலைக்குத் தேங்காயை கொள்முதல் செய்ய வேண்டும்.

கொப்பரைக்கு குறைந்தபட்ச ஆதார விலையாக ரூ.150-வழங்க மத்திய அரசை தமிழக அரசு வலியுறுத்த வேண்டும். ரேஷன் கடையில் மானியத்துடன் வழங்கும் பாமாயிலுக்கு பதிலாகத் தேங்காய் எண்ணெய் வழங்க வேண்டும். உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் கூட்டத்தில் வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
மேலும், தென்னை விவசாயிகளின் இக்கோரிக்கைகளை வலியுறுத்தி ஜூலை 13-ஆம் தேதி பொள்ளாச்சியில் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாகவும் தெரிவித்தனர். பின்னர், கோரிக்கைகள் தொடர்பாக பொள்ளாச்சி சார் ஆட்சியர் தாக்கரே சுபம் ஞானதேவ்ராவை சந்தித்த விவசாயிகள் மனு அளித்தனர்.
தமிழகத்தில் கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் தென்னை விவசாயத்தை முதன்மையாக விவசாயிகள் செய்து வருகின்றனர். கடந்த பல மாதங்களாக தேங்காய் விலையில் கடுமையான வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதால், விவசாயிகள் மிகப்பெரிய பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர்.
இந்நிலையில், தமிழ்நாடு தென்னை உற்பத்தியாளர்கள் சங்க ஆலோசனைக் கூட்டம் பொள்ளாச்சியில் நடைபெற்றது. இதில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர். தமிழகத்தில் தேங்காய் விலை வீழ்ச்சியை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், நெல்லை அரசு கொள்முதல் செய்வது போல தென்னை விவசாயிகளிடம் இருந்து நேரடியாக குறைந்தபட்ச ஆதார விலைக்குத் தேங்காயை கொள்முதல் செய்ய வேண்டும்.
கொப்பரைக்கு குறைந்தபட்ச ஆதார விலையாக ரூ.150-வழங்க மத்திய அரசை தமிழக அரசு வலியுறுத்த வேண்டும். ரேஷன் கடையில் மானியத்துடன் வழங்கும் பாமாயிலுக்கு பதிலாகத் தேங்காய் எண்ணெய் வழங்க வேண்டும். உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் கூட்டத்தில் வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
மேலும், தென்னை விவசாயிகளின் இக்கோரிக்கைகளை வலியுறுத்தி ஜூலை 13-ஆம் தேதி பொள்ளாச்சியில் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாகவும் தெரிவித்தனர். பின்னர், கோரிக்கைகள் தொடர்பாக பொள்ளாச்சி சார் ஆட்சியர் தாக்கரே சுபம் ஞானதேவ்ராவை சந்தித்த விவசாயிகள் மனு அளித்தனர்.