வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக பொள்ளாச்சியில் தொடர்ந்து 3-மணி நேரத்திற்கும் மேலாக நல்ல மழை பெய்து வருவதால் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டதோடு வியாபாரம் மந்தமாக இருப்பதாக வியாபாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
கோவை: பொள்ளாச்சியில் 3-மணி நேரத்திற்கும் மேலாக மழை பெய்து வருகிறது.
தமிழகத்தில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக கடந்த சில நாட்களாக கோவை, திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. அந்த வகையில் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ள பொள்ளாச்சி, ஆழியாறு, வால்பாறை, ஆனைமலை சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில தினங்களாக அவ்வப்போது விட்டு விட்டு லேசாக மழை பெய்து வந்தது.

இந்த நிலையில், இன்று காலை முதல் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. இதையடுத்து, 11 மணிக்கு மேல் தொடர்ந்து நல்ல மழை பெய்து பெய்து வருகிறது.
இதனால், சாலைகளில் முகப்பு விளக்குகளை எரியவிட்ட படியே வாகன ஓட்டிகள் வாகனங்களை இயக்க முடிகிறது. பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வர முடியாமல் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் குண்டும் குழியுமாக காணப்படும் சாலைகளில் மழைநீர் தேங்கி உள்ளதால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

கடந்த மூன்று மணி நேரத்திற்கும் மேலாக பெய்து வரும் மழையின் காரணமாக மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படும் கடைவீதி, மார்க்கெட் ரோடு, கோவை ரோடு, உள்ளிட்ட வணிக வளாகங்கள் நிறைந்த பகுதிகளில் பொதுமக்கள் வருகை இன்றி வியாபாரம் மந்தமாக இருப்பதாக வியாபாரிகள் கவலை தெரிவித்துள்ளனர். இருப்பினும் பொள்ளாச்சியில் குளுமையான சீதோசன நிலை நிலவி வருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழகத்தில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக கடந்த சில நாட்களாக கோவை, திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. அந்த வகையில் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ள பொள்ளாச்சி, ஆழியாறு, வால்பாறை, ஆனைமலை சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில தினங்களாக அவ்வப்போது விட்டு விட்டு லேசாக மழை பெய்து வந்தது.
இந்த நிலையில், இன்று காலை முதல் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. இதையடுத்து, 11 மணிக்கு மேல் தொடர்ந்து நல்ல மழை பெய்து பெய்து வருகிறது.
இதனால், சாலைகளில் முகப்பு விளக்குகளை எரியவிட்ட படியே வாகன ஓட்டிகள் வாகனங்களை இயக்க முடிகிறது. பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வர முடியாமல் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் குண்டும் குழியுமாக காணப்படும் சாலைகளில் மழைநீர் தேங்கி உள்ளதால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
கடந்த மூன்று மணி நேரத்திற்கும் மேலாக பெய்து வரும் மழையின் காரணமாக மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படும் கடைவீதி, மார்க்கெட் ரோடு, கோவை ரோடு, உள்ளிட்ட வணிக வளாகங்கள் நிறைந்த பகுதிகளில் பொதுமக்கள் வருகை இன்றி வியாபாரம் மந்தமாக இருப்பதாக வியாபாரிகள் கவலை தெரிவித்துள்ளனர். இருப்பினும் பொள்ளாச்சியில் குளுமையான சீதோசன நிலை நிலவி வருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.