இருசக்கர வாகனங்களில் செல்வோர் ஹெல்மெட் அணியாமலும், கார்களில் செல்வோர் சீட் பெல்ட் அணியாமலும் சென்றால், சிசிடிவிகள் மூலம் கண்காணிக்கப்பட்டு சட்டபடி நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை மாநகர போக்குவரத்து துறை சார்பில் அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டு வருகின்றன.
கோவை: கோவை மாநகரில் விபத்துக்களை குறைக்க போக்குவரத்து காவல்துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி நிர்வாகம் சார்பிலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் கோவை மாநகரில்இருசக்கர வாகனங்களில் செல்வோர் ஹெல்மெட் அணியாமலும், கார்களில் செல்வோர் சீட் பெல்ட் அணியாமலும் சென்றால் சிசிடிவிகள் மூலம் கண்காணிக்கப்பட்டு சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை மாநகர போக்குவரத்து துறை சார்பில் அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டு வருகின்றன.

கோவை மாநகர போக்குவரத்து துணை ஆணையர் மதிவாணன் ஏற்கனவே இதனை செயல்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறியிருந்தார். இந்நிலையில் வாகன ஓட்டிகள் வழக்கமாக செல்ல கூடிய பெட்ரோல் பங்க் களில் இந்த அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டு வருகின்றன.
அந்த அறிவிப்பு பலகையில், வாடிக்கையாளர்கள் சிசிடிவி கேமரா மூலம் கண்காணிக்கப்படுகிறீர்கள் ஹெல்மெட், சீட் பெல்ட் அணியாதவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி நிர்வாகம் சார்பிலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் கோவை மாநகரில்இருசக்கர வாகனங்களில் செல்வோர் ஹெல்மெட் அணியாமலும், கார்களில் செல்வோர் சீட் பெல்ட் அணியாமலும் சென்றால் சிசிடிவிகள் மூலம் கண்காணிக்கப்பட்டு சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை மாநகர போக்குவரத்து துறை சார்பில் அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டு வருகின்றன.
கோவை மாநகர போக்குவரத்து துணை ஆணையர் மதிவாணன் ஏற்கனவே இதனை செயல்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறியிருந்தார். இந்நிலையில் வாகன ஓட்டிகள் வழக்கமாக செல்ல கூடிய பெட்ரோல் பங்க் களில் இந்த அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டு வருகின்றன.
அந்த அறிவிப்பு பலகையில், வாடிக்கையாளர்கள் சிசிடிவி கேமரா மூலம் கண்காணிக்கப்படுகிறீர்கள் ஹெல்மெட், சீட் பெல்ட் அணியாதவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.