ஹெல்மெட், சீட் பெல்ட் அணியாமல் சென்றால் சிசிடிவி மூலம் கண்காணிக்கப்பட்டு நடவடிக்கை - கோவை மாநகர காவல்துறை எச்சரிக்கை..!

இருசக்கர வாகனங்களில் செல்வோர் ஹெல்மெட் அணியாமலும், கார்களில் செல்வோர் சீட் பெல்ட் அணியாமலும் சென்றால், சிசிடிவிகள் மூலம் கண்காணிக்கப்பட்டு சட்டபடி நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை மாநகர போக்குவரத்து துறை சார்பில் அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டு வருகின்றன.


கோவை: கோவை மாநகரில் விபத்துக்களை குறைக்க போக்குவரத்து காவல்துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி நிர்வாகம் சார்பிலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் கோவை மாநகரில்இருசக்கர வாகனங்களில் செல்வோர் ஹெல்மெட் அணியாமலும், கார்களில் செல்வோர் சீட் பெல்ட் அணியாமலும் சென்றால் சிசிடிவிகள் மூலம் கண்காணிக்கப்பட்டு சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை மாநகர போக்குவரத்து துறை சார்பில் அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டு வருகின்றன.



கோவை மாநகர போக்குவரத்து துணை ஆணையர் மதிவாணன் ஏற்கனவே இதனை செயல்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறியிருந்தார். இந்நிலையில் வாகன ஓட்டிகள் வழக்கமாக செல்ல கூடிய பெட்ரோல் பங்க் களில் இந்த அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டு வருகின்றன.

அந்த அறிவிப்பு பலகையில், வாடிக்கையாளர்கள் சிசிடிவி கேமரா மூலம் கண்காணிக்கப்படுகிறீர்கள் ஹெல்மெட், சீட் பெல்ட் அணியாதவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Newsletter

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...