கோவை - பொள்ளாச்சி தேசிய நெடுச்சாலையில் ஏழூர் பிரிவு அருகே தேசிய நெடுஞ்சாலைத்துறை சார்பில் சுங்கச் சாவடி அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து நில உரிமையாளர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு.
கோவை: கோவை - பொள்ளாச்சி சாலையில் சுங்கச்சாவடி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளை முற்றுகையிட்ட நில உரிமையாளர்களால் பரபரப்பு நிலவியது.
கோவை - பொள்ளாச்சி தேசிய நெடுச்சாலையில், புதிதாக 4 வழி சிமெண்ட் சாலை அமைக்கப்பட்டது.
இந்நிலையில், ஏழூர் பிரிவு அருகே தேசிய நெடுஞ்சாலைத்துறை சார்பில் சுங்கச் சாவடி அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்காக, நிலம் கையக்கபடுத்துவது தொடர்பாக ஆய்வு மேற்கொள்ள அதிகாரிகள் அங்கு வந்தனர்.
அப்போது, சுங்கச்சாவடி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, நில உரிமையாளர்கள், அதிகாரிகளை முற்றுகையிட்டால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.