கோவை மாவட்ட காவல் துறையின் 'ப்ராஜெக்ட் பள்ளிக்கூடம்' திட்டம் துவக்கம்

இவ்விழிப்புணர்வு கூட்டத்தின் துவக்க விழாவில், கோவையை சேர்ந்த 94 பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், உதவி தலைமை ஆசிரியர்கள் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள் என சுமார் 300 பேர் கலந்து கொண்டனர்.


கோவை: கோவை மாவட்டத்தில் அனைத்து குழந்தைகளுக்கும் பாலியல் சம்மந்தமான விழிப்புணர்வு ஏற்படுத்த, மாவட்ட காவல் துறை சார்பில் "ப்ராஜெக்ட் பள்ளிக்கூடம்" என்ற விழிப்புணர்வு திட்டம் இன்று அறிமுகப்படுத்தப்பட்டது.

கோவை மாவட்டத்தில் உள்ள குழந்தைகளுக்கு எதிரான பாலியல் உள்ளிட்ட எந்த ஒரு குற்றங்களும் நடைபெறாமல் தடுப்பது மற்றும் அவர்களை அக்குற்றங்களிலிருந்து பாதுகாப்பது என்பதே "ப்ராஜெக்ட் பள்ளிக்கூடம்" திட்டத்தின் நோக்கமாகும்.



இவ்விழிப்புணர்வு கூட்டத்தின் துவக்க நிகழ்ச்சி இன்று கோவையில் உள்ள கொங்குநாடு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது.



இந்நிகழ்ச்சியில் 94 பள்ளிகளில் பணிபுரியும் தலைமை ஆசிரியர்கள், உதவி தலைமை ஆசிரியர்கள் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள் என சுமார் 300 பேர் கலந்து கொண்டனர்.



குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தெரிவிக்க *1098* என்ற எண்ணிலும், கோவை மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை எண் *94981-81212* மற்றும் வாட்ஸ்அப் எண் *77081-00100* என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

நிகழ்ச்சியில், மேற்கு மண்டல ஐ.ஜி தலைவர் சுதாகர் தலைமை வகித்தார். கோவை சரக காவல்துறை டி.ஐ.ஜி எம்.எஸ். முத்துசாமி, கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன், மாவட்ட கல்வி அலுவலர், பெரியநாயக்கன்பாளையம் உட்கோட்ட துணைக்காவல் கண்காணிப்பாளர் ராஜபாண்டி, மற்றும் அக்கல்லூரியின் நிர்வாக செயலாளர் மற்றும் காவல் துறையினர் பங்கேற்றனர்.

Newsletter

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...