ஆட்டோ ஓட்டுநர்கள், சவாரி அழைத்து செல்லும் போது ஒரு சிலர் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வண்ணம் செயல்படுவதாக புகார்கள் வருவதாகவும், இது போன்று புகார்கள் வராத வண்ணம் பார்த்து கொள்ளுங்கள் என்று ஆட்டோ ஓட்டுநர்களுக்கு அறிவுறுத்தினார்.
கோவை: கோவை மாநகரில் உள்ள ஆட்டோ மற்றும் டாக்ஸி ஓட்டுநர்களிடம் போக்குவரத்து விபத்துகள் குறித்து கோவை மாநகர போக்குவரத்து துணை ஆணையர் மதிவாணன் கலந்துரையாடினார்.

கோவை உப்பிலிபாளையம் பகுதியில், நடைபெற்ற சந்திப்பில் பேசிய போக்குவரத்து துணை ஆணையர், "சாலை விபத்துகளே இல்லாத மாநகராக கோவையை கொண்டு வர நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். விபத்துகளை குறைக்க பள்ளி மாணவர்களிடம் இருசக்கர வாகனங்களை தர வேண்டாம் எனவும் லைசன்ஸ் இல்லாமல் அவர்கள் வாகனங்களை இயக்கினால் அவர்கள் மீதும் வாகனத்தை தந்தவர்கள் மீதும் வழக்கு பதிவு செய்யப்படும்.
பெட்ரோல் பங்குகளில் ஹெல்மெட் மற்றும் சீட் பெல்ட் அணியாமல் வந்தால், அங்குள்ள சிசிடிவிகளை ஆராய்ந்து சமந்தப்பட்ட நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்படும். டாக்ஸி மற்றும் ஆட்டோ ஓட்டுநர்கள், சவாரி அழைத்து செல்லும் போது ஒரு சிலர் தவறாக உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வண்ணம் செயல்படுவதாக புகார்கள் வருவதாகவும், இது போன்று புகார்கள் வராத வண்ணம் பார்த்து கொள்ளுங்கள்" என்று ஆட்டோ ஓட்டுனர்களிடம் கூறினார்.

கூட்டத்தில், ஆட்டோ மற்றும் டாக்ஸி ஓட்டுநர்கள் அவர்கள் சந்தித்து வரும் சிக்கல்களையும், கோரிக்கைகளையும் முன்வைத்தனர்.
கோவை உப்பிலிபாளையம் பகுதியில், நடைபெற்ற சந்திப்பில் பேசிய போக்குவரத்து துணை ஆணையர், "சாலை விபத்துகளே இல்லாத மாநகராக கோவையை கொண்டு வர நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். விபத்துகளை குறைக்க பள்ளி மாணவர்களிடம் இருசக்கர வாகனங்களை தர வேண்டாம் எனவும் லைசன்ஸ் இல்லாமல் அவர்கள் வாகனங்களை இயக்கினால் அவர்கள் மீதும் வாகனத்தை தந்தவர்கள் மீதும் வழக்கு பதிவு செய்யப்படும்.
பெட்ரோல் பங்குகளில் ஹெல்மெட் மற்றும் சீட் பெல்ட் அணியாமல் வந்தால், அங்குள்ள சிசிடிவிகளை ஆராய்ந்து சமந்தப்பட்ட நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்படும். டாக்ஸி மற்றும் ஆட்டோ ஓட்டுநர்கள், சவாரி அழைத்து செல்லும் போது ஒரு சிலர் தவறாக உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வண்ணம் செயல்படுவதாக புகார்கள் வருவதாகவும், இது போன்று புகார்கள் வராத வண்ணம் பார்த்து கொள்ளுங்கள்" என்று ஆட்டோ ஓட்டுனர்களிடம் கூறினார்.
கூட்டத்தில், ஆட்டோ மற்றும் டாக்ஸி ஓட்டுநர்கள் அவர்கள் சந்தித்து வரும் சிக்கல்களையும், கோரிக்கைகளையும் முன்வைத்தனர்.