கோவையில் ஆட்டோ மற்றும் டாக்ஸி ஓட்டுநர்களிடம் மாநகர போக்குவரத்து துணை ஆணையர் மதிவாணன் கலந்துரையாடல்….!

ஆட்டோ ஓட்டுநர்கள், சவாரி அழைத்து செல்லும் போது ஒரு சிலர் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வண்ணம் செயல்படுவதாக புகார்கள் வருவதாகவும், இது போன்று புகார்கள் வராத வண்ணம் பார்த்து கொள்ளுங்கள் என்று ஆட்டோ ஓட்டுநர்களுக்கு அறிவுறுத்தினார்.


கோவை: கோவை மாநகரில் உள்ள ஆட்டோ மற்றும் டாக்ஸி ஓட்டுநர்களிடம் போக்குவரத்து விபத்துகள் குறித்து கோவை மாநகர போக்குவரத்து துணை ஆணையர் மதிவாணன் கலந்துரையாடினார்.



கோவை உப்பிலிபாளையம் பகுதியில், நடைபெற்ற சந்திப்பில் பேசிய போக்குவரத்து துணை ஆணையர், "சாலை விபத்துகளே இல்லாத மாநகராக கோவையை கொண்டு வர நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். விபத்துகளை குறைக்க பள்ளி மாணவர்களிடம் இருசக்கர வாகனங்களை தர வேண்டாம் எனவும் லைசன்ஸ் இல்லாமல் அவர்கள் வாகனங்களை இயக்கினால் அவர்கள் மீதும் வாகனத்தை தந்தவர்கள் மீதும் வழக்கு பதிவு செய்யப்படும்.

பெட்ரோல் பங்குகளில் ஹெல்மெட் மற்றும் சீட் பெல்ட் அணியாமல் வந்தால், அங்குள்ள சிசிடிவிகளை ஆராய்ந்து சமந்தப்பட்ட நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்படும். டாக்ஸி மற்றும் ஆட்டோ ஓட்டுநர்கள், சவாரி அழைத்து செல்லும் போது ஒரு சிலர் தவறாக உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வண்ணம் செயல்படுவதாக புகார்கள் வருவதாகவும், இது போன்று புகார்கள் வராத வண்ணம் பார்த்து கொள்ளுங்கள்" என்று ஆட்டோ ஓட்டுனர்களிடம் கூறினார்.



கூட்டத்தில், ஆட்டோ மற்றும் டாக்ஸி ஓட்டுநர்கள் அவர்கள் சந்தித்து வரும் சிக்கல்களையும், கோரிக்கைகளையும் முன்வைத்தனர்.

Newsletter

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...