நகராட்சி அதிகாரிகள் பாதாள சாக்கடை பணிகள் முடிவடைந்த இடங்களில் தார் சாலை அமைக்கும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோவை: கோவை பொள்ளாச்சி நகராட்சியில் பாதாள சாக்கடை பணிகள் முடிந்தும் தார்சாலை போடாததால், வாகன ஓட்டிகள் அவதி அடைந்து வருகின்றனர்.
பொள்ளாச்சி நகராட்சியில் கடந்த 2016-ம் ஆண்டு பாதாள சாக்கடை திட்ட பணிகள் தொடங்கியது. 5- ஆண்டுகளுக்கு மேலாகியும் பணிகள் முடிக்கப்படாமல் ஆமை வேகத்தில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், பொள்ளாச்சி நகரம், மகாலிங்கபுரம், வெங்கடேச காலனி உள்ளிட்ட பகுதிகளில் பாதாள சாக்கடை இணைப்புகள் வழங்கப்பட்டு தார் சாலை அமைக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், பொள்ளாச்சி நகராட்சிக்குட்பட்ட சி.டி.சி காலனி, ஜோதி நகர், கோட்டூர் ரோடு, உள்ளிட்ட பகுதிகளில், பாதாள சாக்கடை இணைப்புகள் கொடுத்தும், இன்னும் தார் சாலை அமைக்கும் பணிகள் நடைபெறாமல் உள்ளது.
இதனால் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கடுமையாக அவதிப்படுவதாகவும், இரவு நேரங்களில் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருவதாகவும், பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
எனவே, நகராட்சி அதிகாரிகள் பாதாள சாக்கடை பணிகள் முடிவடைந்த இடங்களில் தார் சாலை அமைக்கும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொள்ளாச்சி நகராட்சியில் கடந்த 2016-ம் ஆண்டு பாதாள சாக்கடை திட்ட பணிகள் தொடங்கியது. 5- ஆண்டுகளுக்கு மேலாகியும் பணிகள் முடிக்கப்படாமல் ஆமை வேகத்தில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், பொள்ளாச்சி நகரம், மகாலிங்கபுரம், வெங்கடேச காலனி உள்ளிட்ட பகுதிகளில் பாதாள சாக்கடை இணைப்புகள் வழங்கப்பட்டு தார் சாலை அமைக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், பொள்ளாச்சி நகராட்சிக்குட்பட்ட சி.டி.சி காலனி, ஜோதி நகர், கோட்டூர் ரோடு, உள்ளிட்ட பகுதிகளில், பாதாள சாக்கடை இணைப்புகள் கொடுத்தும், இன்னும் தார் சாலை அமைக்கும் பணிகள் நடைபெறாமல் உள்ளது.
இதனால் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கடுமையாக அவதிப்படுவதாகவும், இரவு நேரங்களில் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருவதாகவும், பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
எனவே, நகராட்சி அதிகாரிகள் பாதாள சாக்கடை பணிகள் முடிவடைந்த இடங்களில் தார் சாலை அமைக்கும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.