கோவை பொள்ளாச்சி நகராட்சியில் பாதாளச் சாக்கடை பணிகள் முடிந்தும் தார்சாலை போடாததால், வாகன ஓட்டிகள் அவதி..!

நகராட்சி அதிகாரிகள் பாதாள சாக்கடை பணிகள் முடிவடைந்த இடங்களில் தார் சாலை அமைக்கும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


கோவை: கோவை பொள்ளாச்சி நகராட்சியில் பாதாள சாக்கடை பணிகள் முடிந்தும் தார்சாலை போடாததால், வாகன ஓட்டிகள் அவதி அடைந்து வருகின்றனர்.

பொள்ளாச்சி நகராட்சியில் கடந்த 2016-ம் ஆண்டு பாதாள சாக்கடை திட்ட பணிகள் தொடங்கியது. 5- ஆண்டுகளுக்கு மேலாகியும் பணிகள் முடிக்கப்படாமல் ஆமை வேகத்தில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், பொள்ளாச்சி நகரம், மகாலிங்கபுரம், வெங்கடேச காலனி உள்ளிட்ட பகுதிகளில் பாதாள சாக்கடை இணைப்புகள் வழங்கப்பட்டு தார் சாலை அமைக்கப்பட்டுள்ளது.



இருப்பினும், பொள்ளாச்சி நகராட்சிக்குட்பட்ட சி.டி.சி காலனி, ஜோதி நகர், கோட்டூர் ரோடு, உள்ளிட்ட பகுதிகளில், பாதாள சாக்கடை இணைப்புகள் கொடுத்தும், இன்னும் தார் சாலை அமைக்கும் பணிகள் நடைபெறாமல் உள்ளது.

இதனால் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கடுமையாக அவதிப்படுவதாகவும், இரவு நேரங்களில் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருவதாகவும், பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

எனவே, நகராட்சி அதிகாரிகள் பாதாள சாக்கடை பணிகள் முடிவடைந்த இடங்களில் தார் சாலை அமைக்கும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...