திருமண செலவுக்காக ரூ.28-ஆயிரம் வாங்கிய நிலையில், சரியான நேரத்தில் பணத்தை திருப்பி செலுத்த முடியவில்லை என்பதால், திருமணமான 4-மாதத்தில் புதுமாப்பிள்ளை தற்கொலை செய்து கொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை: கோவை பொள்ளாச்சியில் திருமண செலவுக்கு வாங்கிய கடனை திருப்பி கொடுக்க முடியாமல் கூலி தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பொள்ளாச்சியை அடுத்த கோட்டூர் ரோடு நடராஜ் மணியகாரர் காலனியை சேர்ந்தவர் ஐயப்பன்(23). சுமை தூக்கும் தொழில் செய்து வந்தார். இவருக்கும் கமலி (20) என்பவருக்கும் கடந்த 4-மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
திருமண செலவுக்காக ஐயப்பன் அருகில் உள்ளவர்களிடம் ரூ.28-ஆயிரம் வாங்கி உள்ளார். அதனை அவரால் சரியான நேரத்தில் திருப்பி செலுத்த முடியவில்லை. இது அவரது தாயாருக்கு தெரியவந்தது.
உடனே அவர் ஐயப்பனிடம் பணத்தை திருப்பி செலுத்துமாறு அறிவுரை கூறினார். இதனால் ஐயப்பன் கடந்த சில நாட்களாக மனவேதனையுடன் இருந்து வந்ததாக தெரிகிறது.
நேற்று விரக்தி அடைந்த அவர் வீட்டில் தூக்கிட்டு கொண்டதாக தெரிகிறது. வீட்டின் அருகில் வசிக்கும் நபர் அவர் தூக்கிட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். அருகிலிருந்தவர்கள் அவரை மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்றார்.
அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து, பொள்ளாச்சி கிழக்கு போலீசாருக்கு சம்பவ இடத்திற்கு வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமான 4-மாதத்தில் புதுமாப்பிள்ளை தற்கொலை செய்து கொண்டது அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பொள்ளாச்சியை அடுத்த கோட்டூர் ரோடு நடராஜ் மணியகாரர் காலனியை சேர்ந்தவர் ஐயப்பன்(23). சுமை தூக்கும் தொழில் செய்து வந்தார். இவருக்கும் கமலி (20) என்பவருக்கும் கடந்த 4-மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
திருமண செலவுக்காக ஐயப்பன் அருகில் உள்ளவர்களிடம் ரூ.28-ஆயிரம் வாங்கி உள்ளார். அதனை அவரால் சரியான நேரத்தில் திருப்பி செலுத்த முடியவில்லை. இது அவரது தாயாருக்கு தெரியவந்தது.
உடனே அவர் ஐயப்பனிடம் பணத்தை திருப்பி செலுத்துமாறு அறிவுரை கூறினார். இதனால் ஐயப்பன் கடந்த சில நாட்களாக மனவேதனையுடன் இருந்து வந்ததாக தெரிகிறது.
நேற்று விரக்தி அடைந்த அவர் வீட்டில் தூக்கிட்டு கொண்டதாக தெரிகிறது. வீட்டின் அருகில் வசிக்கும் நபர் அவர் தூக்கிட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். அருகிலிருந்தவர்கள் அவரை மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்றார்.
அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து, பொள்ளாச்சி கிழக்கு போலீசாருக்கு சம்பவ இடத்திற்கு வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமான 4-மாதத்தில் புதுமாப்பிள்ளை தற்கொலை செய்து கொண்டது அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.