கோவை பொள்ளாச்சியில் திருமண செலவுக்கு வாங்கிய கடனை திருப்பி கொடுக்க முடியாமல் கூலி தொழிலாளி தற்கொலை..!

திருமண செலவுக்காக ரூ.28-ஆயிரம் வாங்கிய நிலையில், சரியான நேரத்தில் பணத்தை திருப்பி செலுத்த முடியவில்லை என்பதால், திருமணமான 4-மாதத்தில் புதுமாப்பிள்ளை தற்கொலை செய்து கொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


கோவை: கோவை பொள்ளாச்சியில் திருமண செலவுக்கு வாங்கிய கடனை திருப்பி கொடுக்க முடியாமல் கூலி தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பொள்ளாச்சியை அடுத்த கோட்டூர் ரோடு நடராஜ் மணியகாரர் காலனியை சேர்ந்தவர் ஐயப்பன்(23). சுமை தூக்கும் தொழில் செய்து வந்தார். இவருக்கும் கமலி (20) என்பவருக்கும் கடந்த 4-மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

திருமண செலவுக்காக ஐயப்பன் அருகில் உள்ளவர்களிடம் ரூ.28-ஆயிரம் வாங்கி உள்ளார். அதனை அவரால் சரியான நேரத்தில் திருப்பி செலுத்த முடியவில்லை. இது அவரது தாயாருக்கு தெரியவந்தது.

உடனே அவர் ஐயப்பனிடம் பணத்தை திருப்பி செலுத்துமாறு அறிவுரை கூறினார். இதனால் ஐயப்பன் கடந்த சில நாட்களாக மனவேதனையுடன் இருந்து வந்ததாக தெரிகிறது.

நேற்று விரக்தி அடைந்த அவர் வீட்டில் தூக்கிட்டு கொண்டதாக தெரிகிறது. வீட்டின் அருகில் வசிக்கும் நபர் அவர் தூக்கிட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். அருகிலிருந்தவர்கள் அவரை மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்றார்.

அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து, பொள்ளாச்சி கிழக்கு போலீசாருக்கு சம்பவ இடத்திற்கு வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமான 4-மாதத்தில் புதுமாப்பிள்ளை தற்கொலை செய்து கொண்டது அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...