சர்வதேச 'போதைப்பொருள் விழிப்புணர்வு' தினம்: வாகன ஓட்டிகளை உறுதிமொழி ஏற்க செய்த திருப்பூர் போலீசார்..!

போதைப் பொருளை எக்காரணம் கொண்டும் பயன்படுத்த மாட்டேன் மற்றும் தனது உறவினர்கள் நண்பர்களையும் பயன்படுத்த விட மாட்டேன் என வாகன ஓட்டிகளை உறுதிமொழி ஏற்க செய்தனர்.



திருப்பூர்: சர்வதேச 'போதைப்பொருள் விழிப்புணர்வு' தினத்தை முன்னிட்டு வாகன ஓட்டிகளை போலீசார் உறுதிமொழி ஏற்க செய்தனர்.



சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினம் ஜூன் மாதம் 26 ஆம் தேதி கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. போதை பொருள் ஒழிப்பு தொடர்பாக தமிழக போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், போதைப்பொருள் விழிப்புணர்வைப் பொதுமக்களுக்கு ஏற்படுத்தும் விதமாக 26-ம் தேதி முதல் ஒரு வாரத்திற்குத் திருப்பூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் போலீசார் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தி வருகின்றனர்.



அதன்படி, திருப்பூர் மங்கலம் சாலை வாகன சோதனை சாவடியில் சென்ட்ரல் காவல் நிலைய உதவி ஆய்வாளர் குணசேகரன் தலைமையில், வாகன ஓட்டிகளுக்கு போதைப்பொருள் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகளை விளக்கி கூறினர்.



மேலும், போதைப் பொருளை எக்காரணம் கொண்டும் பயன்படுத்த மாட்டேன் மற்றும் தனது உறவினர்கள் நண்பர்களையும் பயன்படுத்த விட மாட்டேன் என வாகன ஓட்டிகளை உறுதிமொழி ஏற்க செய்தனர்.

Newsletter

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...