கோவை பொள்ளாச்சி வங்கியில் கடன் பெற்றுத் தருவதாக கூறி கடலூரைச் சேர்ந்த பெண்ணிடம் பணம் மோசடி..!

வங்கி மேலாளர் கொடுத்த புகாரின் பேரில், பொள்ளாச்சியை சேர்ந்த நபர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, கிழக்கு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


கோவை: வங்கியில் கடன் பெற்றுத் தருவதாக கூறி கடலூரைச் சேர்ந்த பெண்ணிடம் பணம் மோசடி செய்த, பொள்ளாச்சியை சேர்ந்த ஆசாமி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

பொள்ளாச்சி சுப்பையன் நகரை சேர்ந்தவர் காளிதாஸ்(32). இவர், கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பட்டியை சேர்ந்த மூர்த்தி என்பவரின் மனைவி தமிழ்செல்வியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, தான் நியூ ஸ்கீம் ரோட்டில் உள்ள ஒரு வங்கியில் பணிபுரிவதாக அறிமுகப்படுத்தியுள்ளார்.

பின் கடன் பெற்று தருவதாக கூறி தனது வங்கி கணக்கில் பணம் செலுத்த தெரிவித்துள்ளார். இதை நம்பிய தமிழ்செல்வி மூன்று கட்டமாக மொத்தம் 12,200 செலுத்தியுள்ளார். பணம் கொடுத்தும், பல நாட்கள் கடந்தும் வங்கிக்கடன் பெற்று தராமல் காளிதாஸ், ஏமாற்றி வருவதை தெரிந்து, இதுகுறித்து தமிழ்செல்வி, நியூ ஸ்கீம் ரோட்டில் சம்பந்தப்பட்ட வங்கியில் புகார் தெரிவித்தார்.

இதையடுத்து வங்கி மேலாளர், காளிதாஸ் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்நிலையில், வங்கி மேலாளர் கொடுத்த புகாரின் பேரில், தற்போது கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...