வங்கி மேலாளர் கொடுத்த புகாரின் பேரில், பொள்ளாச்சியை சேர்ந்த நபர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, கிழக்கு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை: வங்கியில் கடன் பெற்றுத் தருவதாக கூறி கடலூரைச் சேர்ந்த பெண்ணிடம் பணம் மோசடி செய்த, பொள்ளாச்சியை சேர்ந்த ஆசாமி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
பொள்ளாச்சி சுப்பையன் நகரை சேர்ந்தவர் காளிதாஸ்(32). இவர், கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பட்டியை சேர்ந்த மூர்த்தி என்பவரின் மனைவி தமிழ்செல்வியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, தான் நியூ ஸ்கீம் ரோட்டில் உள்ள ஒரு வங்கியில் பணிபுரிவதாக அறிமுகப்படுத்தியுள்ளார்.
பின் கடன் பெற்று தருவதாக கூறி தனது வங்கி கணக்கில் பணம் செலுத்த தெரிவித்துள்ளார். இதை நம்பிய தமிழ்செல்வி மூன்று கட்டமாக மொத்தம் 12,200 செலுத்தியுள்ளார். பணம் கொடுத்தும், பல நாட்கள் கடந்தும் வங்கிக்கடன் பெற்று தராமல் காளிதாஸ், ஏமாற்றி வருவதை தெரிந்து, இதுகுறித்து தமிழ்செல்வி, நியூ ஸ்கீம் ரோட்டில் சம்பந்தப்பட்ட வங்கியில் புகார் தெரிவித்தார்.
இதையடுத்து வங்கி மேலாளர், காளிதாஸ் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்நிலையில், வங்கி மேலாளர் கொடுத்த புகாரின் பேரில், தற்போது கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பொள்ளாச்சி சுப்பையன் நகரை சேர்ந்தவர் காளிதாஸ்(32). இவர், கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பட்டியை சேர்ந்த மூர்த்தி என்பவரின் மனைவி தமிழ்செல்வியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, தான் நியூ ஸ்கீம் ரோட்டில் உள்ள ஒரு வங்கியில் பணிபுரிவதாக அறிமுகப்படுத்தியுள்ளார்.
பின் கடன் பெற்று தருவதாக கூறி தனது வங்கி கணக்கில் பணம் செலுத்த தெரிவித்துள்ளார். இதை நம்பிய தமிழ்செல்வி மூன்று கட்டமாக மொத்தம் 12,200 செலுத்தியுள்ளார். பணம் கொடுத்தும், பல நாட்கள் கடந்தும் வங்கிக்கடன் பெற்று தராமல் காளிதாஸ், ஏமாற்றி வருவதை தெரிந்து, இதுகுறித்து தமிழ்செல்வி, நியூ ஸ்கீம் ரோட்டில் சம்பந்தப்பட்ட வங்கியில் புகார் தெரிவித்தார்.
இதையடுத்து வங்கி மேலாளர், காளிதாஸ் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்நிலையில், வங்கி மேலாளர் கொடுத்த புகாரின் பேரில், தற்போது கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.