திருப்பூரில் பள்ளிக்கல்வித்துறை சார்பாக 'கல்லூரி கனவு' எனும் வழிகாட்டுதல் நிகழ்வு..!

ஜெய்வாபாய் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பள்ளிக் கல்வித்துறை சார்பில் 'நான் முதல்வன்' என்னும் திட்டத்தின் கீழ் கல்லூரி கனவு எனும் வழிகாட்டுதல் நிகழ்வை செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தொடங்கி வைத்தார்.


திருப்பூர்: திருப்பூரில் பள்ளிக்கல்வித்துறை சார்பாக கல்லூரி கனவு எனும் வழிகாட்டுதல் நிகழ்வை செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தொடங்கி வைத்தார்.

திருப்பூர் ராயபுரம் பகுதியில் உள்ள ஜெய்வாபாய் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பள்ளிக் கல்வித்துறை சார்பில் 'நான் முதல்வன்' என்னும் திட்டத்தின் கீழ் கல்லூரி கனவு எனும் வழிகாட்டுதல் நிகழ்வு இன்று நடைபெற்றது.



2021-22 ஆம் ஆண்டில் பன்னிரண்டாம் வகுப்பு முடித்த மாணவர்கள் உயர்கல்வியை தேர்ந்தெடுத்தல் மற்றும் தங்கள் தனித்திறனுக்கு ஏற்றவாறு உயர்கல்வியை தேர்வு செய்வது குறித்த வழிகாட்டும் நிகழ்ச்சியை மாநில செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்.



இதில், திருப்பூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.



இதில் பேசிய, செய்தித்துறை அமைச்சர் தமிழக அரசு மாணவ-மாணவியர்களுக்கான பல்வேறு வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்து உயர்கல்வியை குழப்பம் இல்லாமல் தேர்ந்தெடுப்பதற்கான வழியை ஏற்படுத்தி இருப்பதாகவும், மாணவ-மாணவிகள் கல்வியை மட்டும் குறிக்கோளாகக் கொண்டு உயர்ந்த பாதையை அடைய வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.



இந்நிகழ்வில், பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த ஸ்டால்கள் மற்றும் கல்வி கடன் பெறுவது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வங்கிகளின் ஸ்டால்களும் அமைக்கப்பட்டிருந்தன.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...