ஒற்றை காட்டு யானை தாக்கி உயிரிழந்த குடிநீர் சுத்திகரிப்பு நிலைய பராமரிப்பு உதவியாளர் குடும்பத்திற்கு 5 லட்சம் நிவாரணம்!

கோவை பகுதியில் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருக்கும் பொழுது ஒற்றை காட்டு யானை தாக்கி உயிரிழந்த TWAD BOARD குடிநீர் சுத்திகரிப்பு நிலைய பராமரிப்பு உதவியாளர் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் அரசு நிவாரண உதவித் தொகைக்கான காசோலையை மாவட்ட ஆட்சியர் வழங்கியுள்ளார்.


கோவை: கோவை பகுதியில் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருக்கும் பொழுது ஒற்றை காட்டு யானை தாக்கி உயிரிழந்த TWAD BOARD குடிநீர் சுத்திகரிப்பு நிலைய பராமரிப்பு உதவியாளர் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் அரசு நிவாரண உதவித் தொகைக்கான காசோலையை மாவட்ட ஆட்சியர் வழங்கியுள்ளார்.

கோவை போளுவாம்பட்டி வனச்சரகம் சிறுவாணி அடிவாரத்தில் TWAD BOARD குடியிருப்பு பகுதியில் TWAD BOARD குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் பராமரிப்பு உதவியாளராக பணிபுரிந்து வந்த காளிதாஸ் (50) நேற்று மாலை இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருக்கும் பொழுது ஒற்றை காட்டு யானை தாக்கியதில் படுகாயம் அடைந்து உயிரிழந்தார்.



உயிரிழந்த அவரது குடும்பத்தினருக்கு வனத்துறை மூலம் 5 லட்சம் அரசு நிவாரண உதவித் தொகைக்கான காசோலையை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ் சமீரன் வழங்கி ஆறுதல் கூறினார். இதில் கோவை மாவட்ட வன அலுவலர் அசோக் உட்பட வனத்துறை அலுவலர்கள் உடன் இருந்தனர்.

Newsletter

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...