கோவையில் 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பேக்கரி டீ மாஸ்டருக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.20 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
கோவை: கோவையில் 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பேக்கரி டீ மாஸ்டருக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.20 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்தவர் சின்னராஜ் (32). இவர் கோவையில் தங்கி தனியார் பேக்கரி டீ மாஸ்டராக பணியாற்றி வந்தார். அப்போது கடை அருகே வசித்து வந்த கோவையை சேர்ந்த 6 வயது சிறுமியை தனது வீட்டுக்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
இந்த சம்பவத்தை அந்த சிறுமியின் தந்தை நேரில் பார்த்து விட்டார்.
இதையடுத்து அங்கிருந்தவர்கள் உதவியுடன் சின்னராஜை பிடித்து பேரூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார். போலீசார் சின்னராஜ் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
இந்த வழக்கு விசாரணை கோவை சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி குலசேகரன், குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை, ரூ.20 ஆயிரம் அபராதம் மற்றும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.2 லட்சம் அரசு சார்பில் நிவாரணம் வழங்க உத்தரவிட்டார்.
தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்தவர் சின்னராஜ் (32). இவர் கோவையில் தங்கி தனியார் பேக்கரி டீ மாஸ்டராக பணியாற்றி வந்தார். அப்போது கடை அருகே வசித்து வந்த கோவையை சேர்ந்த 6 வயது சிறுமியை தனது வீட்டுக்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
இந்த சம்பவத்தை அந்த சிறுமியின் தந்தை நேரில் பார்த்து விட்டார்.
இதையடுத்து அங்கிருந்தவர்கள் உதவியுடன் சின்னராஜை பிடித்து பேரூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார். போலீசார் சின்னராஜ் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
இந்த வழக்கு விசாரணை கோவை சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி குலசேகரன், குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை, ரூ.20 ஆயிரம் அபராதம் மற்றும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.2 லட்சம் அரசு சார்பில் நிவாரணம் வழங்க உத்தரவிட்டார்.