பொள்ளாச்சி அருகே விவசாய தோட்டத்தில் சட்டவிரோதமாக சூதாடிய 12-பேர் கைது செய்யப்பட்டு 4-லட்சத்து 16-ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.
கோவை: பொள்ளாச்சி அருகே விவசாய தோட்டத்தில் சட்டவிரோதமாக சூதாடிய 12-பேர் கைது செய்யப்பட்டு 4-லட்சத்து 16-ஆயிரம் ரூபாயை பறிமுதல் செய்து மகாலிங்கபுரம் போலீசார் நடவடிக்கை எடுத்தனர்.
பொள்ளாச்சி அருகே உள்ள புளியம்பட்டி பகுதியில் தனியாருக்கு சொந்தமான தோட்டத்தில் சட்டவிரோதமாக ஒரு கும்பல் பணம் வைத்து சூதாடி வருவதாக மகாலிங்கபுரம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதனையடுத்து, அங்கு விரைந்த போலீசார் சம்பந்தப்பட்ட தோட்டத்தில் ஆய்வு செய்தபோது ஒரு கும்பல் அங்கிருந்து தப்பித்துச் செல்ல முயன்றது. பின்னர், போலீசார் அவர்களை கையும் களவுமாக பிடித்து விசாரணை மேற்கொண்டபோது லட்சக்கணக்கில் பணம் வைத்து சூதாடியது தெரியவந்தது.
இதனையடுத்து, அவர்களிடமிருந்து 4-லட்சத்து 16-ஆயிரம் ரூபாயை பறிமுதல் செய்த போலீசார் சூதாட்டத்திற்கு ஏற்பாடு செய்த காளிமுத்து உள்ளிட்ட 12-நபர்களை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.