எல்லன் மருத்துவமனை வழக்கில்,கோவையை சேர்ந்த கேபிள் ராஜா, சுரேஷ், கோகுலகிருஷ்ணன் ஆகிய கூலிப்படையினரை சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர். மேலும், சம்பவத்தில் தொடர்புடைய வழக்கறிஞர் உட்பட சிலரை போலீசார் தேடி வருகின்றனர்.
கோவை: கோவை எல்லன் மருத்துவமனை விவகாரத்தில், மருத்துவமனை உரிமையாளர் மருத்துவர் ராமச்சந்திரன் உட்பட 10 பேரை கைது செய்துள்ள நிலையில், வழக்கில் தொடர்புடைய மேலும் மூவரை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர்.
கோவை டாடாபாத் பகுதியை சேர்ந்த கேபிள் ராஜா (38), ரத்தினபுரி சேர்ந்த சுரேஷ் (33), சிவானந்தா காலனியை சேர்ந்த கோகுலகிருஷ்ணன் (33) ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் 3 பேரும் கூலிப்படையினர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
விசாரணையில், கூலிப்படையை சேர்ந்த கேபிள் ராஜா, சுரேஷ்,கோகுலகிருஷ்ணன் ஆகிய மூவரை பயன்படுத்தியதும், அவர்களுக்கு தினசரி தலா 1,500 ரூபாய் பணம் கொடுத்து அவர்களை அழைத்து வந்ததும் தெரியவந்துள்ளது.
மேலும், மருத்துவமனை தாக்குதல் சம்பவத்தில் தொடர்புடைய வழக்கறிஞர் உட்பட மேலும் சிலரை
சிபிசிஐடி போலீசார் தேடி வருகின்றனர்.
கோவை டாடாபாத் பகுதியை சேர்ந்த கேபிள் ராஜா (38), ரத்தினபுரி சேர்ந்த சுரேஷ் (33), சிவானந்தா காலனியை சேர்ந்த கோகுலகிருஷ்ணன் (33) ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் 3 பேரும் கூலிப்படையினர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
விசாரணையில், கூலிப்படையை சேர்ந்த கேபிள் ராஜா, சுரேஷ்,கோகுலகிருஷ்ணன் ஆகிய மூவரை பயன்படுத்தியதும், அவர்களுக்கு தினசரி தலா 1,500 ரூபாய் பணம் கொடுத்து அவர்களை அழைத்து வந்ததும் தெரியவந்துள்ளது.
மேலும், மருத்துவமனை தாக்குதல் சம்பவத்தில் தொடர்புடைய வழக்கறிஞர் உட்பட மேலும் சிலரை
சிபிசிஐடி போலீசார் தேடி வருகின்றனர்.