கோவையில் பேருந்து நிலைய பொது கழிப்பிடத்திற்கு சென்ற இளைஞரிடம் செல்போன், பணம் திருட்டு - இரண்டு சிறுவர்கள் உட்பட 3 பேர் கைது!

கோவை காந்திபுரம் பேருந்து நிலையத்தில் உள்ள பொதுக் கழிப்பறையில் சிறுநீர் கழிக்கச் சென்ற நபரிடம், சிறுவர்கள் இருவர் துணையோடு செல்போன் மற்றும் பணத்தை திருடிச் சென்ற நபரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.



கோவை: கோவை காந்திபுரம் பேருந்து நிலையத்தில் உள்ள பொதுக் கழிப்பறையில் சிறுநீர் கழிக்கச் சென்ற நபரிடம், சிறுவர்கள் இருவர் துணையோடு செல்போன் மற்றும் பணத்தை திருடிச் சென்ற நபரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்தவர் விஜயகுமார். இவர் கோவை வந்திருந்தார். குனியமுத்தூர் பகுதிக்கு செல்வதற்கு அவர் கோவை காந்திபுரம் பேருந்து நிலையத்திற்கு சென்றிருந்தார். அப்போது அங்குள்ள பொது கழிப்பிடத்திற்கு சிறுநீர் கழிக்க விஜயகுமார் சென்றுள்ளார்.

அப்போது அவரை பின் தொடர்ந்து சென்ற 2 சிறுவர்கள் மற்றும் ஸ்டீபன் ராஜ் ஆகியோர் விஜயகுமாரை மடக்கி உள்ளனர். மூவரும் சேர்ந்து விஜயகுமாரின் கைகளை இறுக்கமாக பிடித்து, அவரிடம் செல்போன் மற்றும் சுமார் ஆயிரம் ரூபாய் பணத்தை திருடிக்கொண்டு தப்பி ஓடினர். பணம் மற்றும் செல்போனை பறிகொடுத்த விஜயகுமார் காட்டூர் காவல் நிலையத்தில் இது தொடர்பாக புகார் அளித்தார்.

இதையடுத்து விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் காந்திபுரம் 2-வது தெருவைச் சேர்ந்த ஸ்டீபன் ராஜ் மற்றும் இரண்டு சிறுவர்களையும் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட ஸ்டீபன் ராஜ் சிறையில் அடைக்கப்பட்டார்.

Newsletter

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...