தமிழ்நாடு ஓபன் எண்ட் ஸ்பின்னிங் மில்ஸ் சங்கம், வட இந்திய ரோட்டார் ஸ்பின்னிங் மில்ஸ் சங்கம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்.

சுற்றுச்சூழல் பாதுகாப்பதில் ஓபன் எண்ட் ஸ்பின்னிங் மில்கள் மிகப்பெரிய பங்களிப்பு செய்கின்றன. இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த இத்துறை எதிர்கொண்டுள்ள பிரச்சினைகள் குறித்து மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு செல்ல புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.



கோவை:  தமிழ்நாடு ஓபன் எண்ட் ஸ்பின்னிங் மில்ஸ் சங்கம், வட இந்திய ரோட்டார் ஸ்பின்னிங் மில்ஸ் சங்கம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது. 'ஓ.இ' மில்கள் பிரச்சினைகளுக்கு இணைந்து செயல்பட முடிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாடு ஓபன் எண்ட் ஸ்பின்னிங் மில்ஸ் சங்கம்(OSMA) மற்றும் வட இந்திய ரோட்டார் ஸ்பின்னிங் மில்ஸ் சங்கம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு ஓபன் எண்ட் ஸ்பின்னிங் மில்கள் சங்கத்தின் (OSMA) தலைவர் , அருள்மொழி மற்றும் வட இந்திய ரோட்டார் ஸ்பின்னிங் மில்ஸ் சங்கத்தின் தலைவர் பிரீதம் சிங் ஆகியோர் கூறியதாவது:-

ஸ்பின்னிங் மில்களில் இருந்து பெறப்படும் கழிவுப் பஞ்சு கொண்டு நூல் உற்பத்தி செய்யும் பணி ஓபன் எண்ட் மில்களில் மேற்கொள்ளப்படுகிறது. தமிழகத்தில் 600க்கும் மேற்பட்ட ஓபன் எண்ட் மில்கள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் நேரடியாகவும், மறைமுகமாகவும் 2 லட்சம் பேர் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர்.

தமிழ்நாட்டில் நாள் ஒன்றுக்கு 25 லட்சம் கிலோ கிரே நூல் 15 லட்சம் கிலோ மறுசுழற்சி செய்யப்பட்ட கலர் நூலும் உற்பத்தி செய்யப்படுகிறது. அதேபோல் பானிபட், பஞ்சாப் உள்ளிட்ட வடமாநிலங்களில் 250 ஓபன் எண்ட் மில்கள் செயல்படுகின்றன. நாள் ஒன்றுக்கு 30 லட்சம் கிலோ மறுசுழற்சி செய்யப்பட்ட கலர் நூலும் 10 லட்சம் கிலோ கிரே காட்டன் மூலம் உற்பத்தி செய்யப்படுகிறது.

ஓபன் எண்ட்  மில்களில் உற்பத்தி செய்யப்படும் நூலை கொண்டு தயாரிக்கப்படும் படுக்கை விரிப்புகள், ஜீன்ஸ், தலையணை உறைகள், துண்டு, கிச்சனில் பயன்படுத்தப்படும் துணி வகைகள், பெண்களுக்கான நைட்டி, லெக்கின்ஸ், திரைசீலைகள், டீ சர்ட், பர்மாடாஸ் உள்ளிட்ட பல்வேறு ஜவுளி பொருட்கள் பெரும்பாலும் ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு பயனளித்து வருகிறது.

உள்நாடு மட்டுமின்றி பல்வேறு வெளிநாடுகளுக்கும் பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. கழிவுப் பஞ்சை பயன்படுத்தி இந்நூல் தயாரிப்பது மட்டுமின்றி பயன்படுத்தப்பட்ட பெட் பாட்டில் மற்றும் பனியன் வேஸ்ட்  உள்ளிட்டவற்றை பயன்படுத்தி நூல் உற்பத்தி செய்யும் பணியும் ஓபன் எண்ட் மில்களில் மேற்கொள்ளப்படுகிறது. இதனால் சுற்றுச்சூழல் பாதுகாப்பதில் ஓபன் எண்ட் ஸ்பின்னிங் மில்கள் மிகப்பெரிய பங்களிப்பு செய்கின்றன.

இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த இத்துறை எதிர்கொண்டுள்ள பிரச்சினைகள் குறித்து மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு செல்ல தமிழ்நாடு ஓபன் எண்ட் ஸ்பின்னிங் மில்கள் சங்கம் மற்றும் வட இந்தியாவில் செயல்படும் வட இந்திய ரோட்டார் ஸ்பின்னிங் மில் சங்கம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

தற்பொழுது ஸ்பின்னிங் மில்களில் இருந்து பெறப்படும் கோம்பர் நாயில் என்று சொல்லக்கூடிய கழிவுப் பஞ்சு ரகத்தின் விலை மிக அதிகமாக உள்ளது. உள்நாட்டு தேவைக்கு போக மட்டுமே ஏற்றுமதி செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நவம்பர் மாதம் பருத்தி சீசன் காலத்தில் மத்திய அரசின் காட்டன் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா அமைப்பு சார்பில் பருத்தி கொள்முதல் செய்யப்பட்டு ஸ்பின்னிங் மில்களுக்கு நேரடியாக விற்பனை செய்ய வேண்டும்.

ஓபன் எண்ட் மில்களில் பயன்படுத்தப்படும் மெஷின்கள் 100%  வெளிநாட்டில் இருந்து தான் இறக்குமதி செய்யப்படுகின்றன எனவே இறக்குமதிக்கு விதிக்கப்படும் வரியை முற்றிலுமாக மத்திய அரசு நீக்க வேண்டும்.

ஓபன் எண்ட் நூல் வகைகளுக்கு தனியாக  'HSN CODE' ஒதுக்கி  அதை கெசட்டில்(GAZETT) அறிவிக்க வேண்டும். மேற்குறிப்பிட்ட கோரிக்கைகள் அனைத்தும் மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்க இரு சங்கங்களும் இணைந்து நடவடிக்கை மேற்கொள்ளும்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Newsletter

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...