பொள்ளாச்சி அருகில் NGGO காலனியில் எச்சரிக்கை இரும்பு பலகை மீது மோதி கேரளாவைச் சேர்ந்த இளைஞர் பலியான சம்பவம் குறித்து பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை: கேரளா மாநிலம் வயநாடு பகுதியை சேர்ந்தவர் ஜுனனத் (27). இவரது நண்பர் இடுக்கி மாவட்டத்தை சேர்ந்த அபிலாஷ் (31). இருவரும் நேற்று நள்ளிரவு ஆழியார் சாலையில் இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தனர்.
அப்போது பொள்ளாச்சி NGGO காலனி, எஸ். பி.ஐ வங்கியின் ஏ.டி.எம் அருகே வந்தபோது நிலை தடுமாறி சாலையோர எச்சரிக்கை தடுப்பு இரும்பு கம்பி மீது மோதி விபத்து ஏற்பட்டது.
இதில், வாகனத்தை ஓட்டி வந்த அபிலாஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயம் அடைந்த ஜுனனத்தை மீட்ட பொதுமக்கள், ஆம்புலன்ஸ் மூலம் அவரை பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அப்போது பொள்ளாச்சி NGGO காலனி, எஸ். பி.ஐ வங்கியின் ஏ.டி.எம் அருகே வந்தபோது நிலை தடுமாறி சாலையோர எச்சரிக்கை தடுப்பு இரும்பு கம்பி மீது மோதி விபத்து ஏற்பட்டது.
இதில், வாகனத்தை ஓட்டி வந்த அபிலாஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயம் அடைந்த ஜுனனத்தை மீட்ட பொதுமக்கள், ஆம்புலன்ஸ் மூலம் அவரை பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.