பொள்ளாச்சி அருகே எச்சரிக்கை இரும்பு பலகை மீது மோதி இளைஞர் பலி.

பொள்ளாச்சி அருகில் NGGO காலனியில் எச்சரிக்கை இரும்பு பலகை மீது மோதி கேரளாவைச் சேர்ந்த இளைஞர் பலியான சம்பவம் குறித்து பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


கோவை: கேரளா மாநிலம் வயநாடு பகுதியை சேர்ந்தவர் ஜுனனத் (27). இவரது நண்பர் இடுக்கி மாவட்டத்தை சேர்ந்த அபிலாஷ் (31). இருவரும் நேற்று நள்ளிரவு ஆழியார் சாலையில் இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தனர்.

அப்போது பொள்ளாச்சி NGGO காலனி, எஸ். பி.ஐ வங்கியின் ஏ.டி.எம் அருகே வந்தபோது நிலை தடுமாறி சாலையோர எச்சரிக்கை தடுப்பு இரும்பு கம்பி மீது மோதி விபத்து ஏற்பட்டது.

இதில், வாகனத்தை ஓட்டி வந்த அபிலாஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயம் அடைந்த ஜுனனத்தை மீட்ட பொதுமக்கள், ஆம்புலன்ஸ் மூலம் அவரை பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...