பொள்ளாச்சி அருகே எச்சரிக்கை இரும்பு பலகை மீது மோதி இளைஞர் பலி.

பொள்ளாச்சி அருகில் NGGO காலனியில் எச்சரிக்கை இரும்பு பலகை மீது மோதி கேரளாவைச் சேர்ந்த இளைஞர் பலியான சம்பவம் குறித்து பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


கோவை: கேரளா மாநிலம் வயநாடு பகுதியை சேர்ந்தவர் ஜுனனத் (27). இவரது நண்பர் இடுக்கி மாவட்டத்தை சேர்ந்த அபிலாஷ் (31). இருவரும் நேற்று நள்ளிரவு ஆழியார் சாலையில் இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தனர்.

அப்போது பொள்ளாச்சி NGGO காலனி, எஸ். பி.ஐ வங்கியின் ஏ.டி.எம் அருகே வந்தபோது நிலை தடுமாறி சாலையோர எச்சரிக்கை தடுப்பு இரும்பு கம்பி மீது மோதி விபத்து ஏற்பட்டது.

இதில், வாகனத்தை ஓட்டி வந்த அபிலாஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயம் அடைந்த ஜுனனத்தை மீட்ட பொதுமக்கள், ஆம்புலன்ஸ் மூலம் அவரை பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...