திமுக, காங்கிரஸ், மதிமுக, சிபிஎம், சிபிஐ கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் சிங்காநல்லூர் ரயில் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை: சிங்காநல்லூர் ரயில் நிலையத்தில் அனைத்து ரயில்களும் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி சிங்காநல்லூர் ரயில் நிலையத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது.
திமுக கோவை மாநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் நா.கார்த்திக் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன், காங்கிரஸ் மாநில செயல் தலைவர் மயூரா ஜெயக்குமார், மதிமுக மாநகர் மாவட்ட செயலாளர் மோகன் குமார், சிபிஐ மாவட்ட செயலாளர் சுந்தரம், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் மாநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் தனபால், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் இலக்கியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் ரயில்வே துறையிடமும், மத்திய அரசிடமும் அவர்களது கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. மேலும், இந்த முற்றுகை போராட்டத்தில் திமுக காங்கிரஸ், மதிமுக, சிபிஎம், சிபிஐ கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துக் கொண்டனர்.