கால தாமதமாக வழக்குப் பதிவு செய்தால், சமந்தப்பட்ட அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்படுவார்கள் எனவும் மூன்று மாதங்களுக்குள் வாகனங்களை கண்டுபிடிக்கவில்லை என்றால், non traceable சான்றிதழ் கொடுக்கவும் ஆணையாளர் பாலகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார்.
கோவை: கோவை மாநகரில் நேற்று ஒரே நாளில் வாகன திருட்டு தொடர்பாக 32 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளது. அந்த வழக்குகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க மாநகர ஆணையாளர் பாலகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார்.
கோவை மாநகரில் நீண்ட நாட்களாகபதிவு செய்யாமல் உள்ள வாகன திருட்டு தொடர்பான வழக்குகளை உடனடியாக பதிவு செய்ய அனைத்து காவல் நிலைய ஆய்வாளர்களுக்கு, மாநகர ஆணையாளர் பாலகிருஷ்ணன் உத்தரவிட்டிருந்தார்.
மேலும், கால தாமதமாக வழக்குப் பதிவு செய்தால், சமந்தப்பட்ட அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்படுவார்கள் எனவும் எச்சரிக்கை விடுத்திருந்தார்.
இதையடுத்து, நேற்று ஒரே நாளில் ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத்தில் -5 வழக்குகள், காட்டூர், பெரியகடை வீதி தலா காவல் நிலையங்களில்- 4, வெரைட்டி ஹால் ரோடு, சாய்பாபா காலனி, குனியமுத்தூர் காவல் நிலையங்களில் தலா -3, ஆர்.எஸ்.புரம், செல்வபுரம் காவல் நிலையங்களில் தலா - 2, உக்கடம், ரத்தினபுரி, போத்தனூர்,பீளமேடு, சரவணம்பட்டி காவல் நிலையங்களில் தலா - 1 வழக்குகள் என 32 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.
திருட்டு தொடர்பான வழக்குகளை உடனடியாக கண்டுபிடிக்கவும், மேலும் 3 மாதங்களுக்குள் வாகனங்கள் கண்டுபிடிக்கவில்லை என்றால், non traceable சான்றிதழ் கொடுக்கவும் ஆணையாளர் பாலகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார்.
கோவை மாநகரில் நீண்ட நாட்களாகபதிவு செய்யாமல் உள்ள வாகன திருட்டு தொடர்பான வழக்குகளை உடனடியாக பதிவு செய்ய அனைத்து காவல் நிலைய ஆய்வாளர்களுக்கு, மாநகர ஆணையாளர் பாலகிருஷ்ணன் உத்தரவிட்டிருந்தார்.
மேலும், கால தாமதமாக வழக்குப் பதிவு செய்தால், சமந்தப்பட்ட அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்படுவார்கள் எனவும் எச்சரிக்கை விடுத்திருந்தார்.
இதையடுத்து, நேற்று ஒரே நாளில் ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத்தில் -5 வழக்குகள், காட்டூர், பெரியகடை வீதி தலா காவல் நிலையங்களில்- 4, வெரைட்டி ஹால் ரோடு, சாய்பாபா காலனி, குனியமுத்தூர் காவல் நிலையங்களில் தலா -3, ஆர்.எஸ்.புரம், செல்வபுரம் காவல் நிலையங்களில் தலா - 2, உக்கடம், ரத்தினபுரி, போத்தனூர்,பீளமேடு, சரவணம்பட்டி காவல் நிலையங்களில் தலா - 1 வழக்குகள் என 32 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.
திருட்டு தொடர்பான வழக்குகளை உடனடியாக கண்டுபிடிக்கவும், மேலும் 3 மாதங்களுக்குள் வாகனங்கள் கண்டுபிடிக்கவில்லை என்றால், non traceable சான்றிதழ் கொடுக்கவும் ஆணையாளர் பாலகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார்.