மத்திய ஜவுளித்துறை அமைச்சரை சந்தித்த கோவை அதிமுக எம்.எல்.ஏக்கள் - ஜவுளித்துறை சந்தித்து வரும் சவால்கள் குறித்து மனு…!

ஜவுளித்துறையில் நிலவி வரும் சிக்கல்களுக்கு தீர்வு காணுமாறு மத்திய இணை அமைச்சர் பியூஸ் கோயலிடம், முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி தலைமையில் அதிமுக எம்.எல்.ஏ க்கள் -- கே. ஆர்.ஜெயராமன், அம்மன் கே அர்ஜுனன் உள்ளிட்டோர் நேரில் ச்ந்தித்து மனு அளித்தனர்.


கோவை: கோவையில் நேற்று"டெக்ஸ் பேர் 2022" என்ற ஜவுளித்துறை இயந்திரங்கள் மற்றும் உதிரிபாகங்கள் கண்காட்சியை, மத்திய இணை அமைச்சர் பியூஷ் கோயல், கொடிசியா அரங்கில் துவக்கி வைத்தார்.

பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள, கோவை வந்துள்ள மத்திய ஜவுளித்துறை அமைச்சர் பியூஸ் கோயலை, நேற்று இரவு அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி தலைமையில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் நேரில் சந்தித்து ஜவுளித்துறையினர் சந்தித்து வரும் சவால்களை குறித்து மனு அளித்தனர்.

இந்த நிலையில், தனியார் ஹோட்டலில் தங்கியுள்ள அவரை இரவு முன்னாள் அமைச்சர்எஸ்.பி வேலுமணி தலைமையில் அதிமுக எம்.எல்.ஏ க்கள் -- கே. ஆர்.ஜெயராமன், அம்மன் கே அர்ஜுனன் உள்ளிட்டோர் நேரில் சந்தித்தனர். இந்நிகழ்வின், போது மத்திய இணையமைச்சர் எல் முருகன், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, கோவை தெற்கு எம்.எல்.ஏவானதி சீனிவாசன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.



இதனை அடுத்து ஜவுளித்துறையில் நிலவி வரும் சிக்கல்களுக்கு தீர்வு காணுமாறு மனுவை, எஸ்.பி வேலுமணி, மத்திய இணை அமைச்சர் பியூஸ் கோயலிடம்அளித்தார். அவர் அளித்த மனுவில் கைத்தறி விசைத்தறி நூற்பாலைகள், ஆடை உற்பத்தியாளர்கள் சந்தித்து வரும் நெருக்கடிகள் தொடர்பாக உடனடி தீர்வு காண வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

பஞ்சுவிலையில்ஏற்பட்டு வரும் ஏற்ற, இறக்கம் தொடர்பாகவும், கைத்தறி விசைத்தறி ஆடை உற்பத்தி தொழிற்சாலைகளில் ஊழியர்கள் சந்தித்து வரும் நெருக்கடிகளை கட்டுப்படுத்த வேண்டும், என கோரியுள்ளனர். மேலும், வட மாநில தொழிலாளர்கள் பலரும் இந்த தொழிற்சாலைகளில் பணிபுரிந்து வரும் நிலையில், அவர்களுக்கு உணவு தங்குமிடம் போன்றவற்றில் பல்வேறு சிக்கல்கள் இருப்பதால் அவர்களுக்கு நிரந்தர இருப்பிடம் ஏற்படுத்தித் தர வேண்டும் என அந்த மனுவில் கோரப்பட்டுள்ளது.



ஜவுளி சந்தை தற்போது அகமதாபாத்தில் மட்டுமே உள்ள நிலையில்,விவசாயிகள் பயனடையும் வகையில் ஜவுளி சந்தையை கோவையிலுள்ள சோமனூர், பல்லடம் அல்லது காரணம்பேட்டை பகுதியில் அமைத்திட வேண்டும் என கோரப்பட்டுள்ளது. மேலும், ஜவுளித் துறை ஊழியர்கள் பயன்பெறும் வகையில் தமிழ்நாடு மின்சார வாரியம் வாயிலாக மானியம் வழங்க வேண்டுமெனவும் கோரப்பட்டுள்ளது.

மேலும், சத்தியமங்கலம் சாலையில்கோவையிலிருந்து கணபதி வரையிலான ஃபுட் கார்பரேஷன் ஆஃப் இந்தியாசாலை மிகவும் மோசமாக உள்ளதால், அதனை சீர்படுத்தி கொடுக்கவும் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் கோரப்பட்டுள்ளது.



கோவை மாவட்டத்தைச் சேர்ந்த அனைத்து அதிமுக எம்எல்ஏக்கள் இந்த மனுவில் கையெழுத்திட்டுள்ளனர். தமிழகத்தில் அரசியல் களம் பரபரப்பாக உள்ள நிலையில், வெறும் மனு அளிப்பதற்காக கோவையை சேர்ந்த அனைத்து அரசியல் பிரமுகர்களும் ஒரே இடத்தில் கூடி இருப்பது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.

Newsletter

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...