பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் பதிவிறக்கம் செய்யப்பட்டு, அந்தந்த தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் மூலம் மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.
கோவை: பொள்ளாச்சியில் பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு பள்ளிகளில் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட்டது.
பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சி, வால்பாறை, ஆனைமலை தாலுகாவுக்கு உட்பட்ட பள்ளிகளில் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வு கடந்த மே மாதம் நடைபெற்றது.
இந்நிலையில், கடந்த 20-ம் தேதி தேர்வு முடிவுகள் வெளியானது. இதைத்தொடர்ந்து, மாணவர்களுக்கு அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கும் நடவடிக்கைகளைக் கல்வி அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு படித்த மாணவர்கள் மேற்படிப்புக்காக விண்ணப்பிக்க மதிப்பெண் சான்றிதழ் தேவைப்படுவதால், இன்று முதல் பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளி உள்ளிட்ட பள்ளிகளில், தேர்ச்சி பெற்ற மாணவர்களின் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் பதிவிறக்கம் செய்யப்பட்டு, அந்தந்த தலைமை ஆசிரியர் ஆசிரியர்கள் மூலம் மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.
பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சி, வால்பாறை, ஆனைமலை தாலுகாவுக்கு உட்பட்ட பள்ளிகளில் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வு கடந்த மே மாதம் நடைபெற்றது.
இந்நிலையில், கடந்த 20-ம் தேதி தேர்வு முடிவுகள் வெளியானது. இதைத்தொடர்ந்து, மாணவர்களுக்கு அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கும் நடவடிக்கைகளைக் கல்வி அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு படித்த மாணவர்கள் மேற்படிப்புக்காக விண்ணப்பிக்க மதிப்பெண் சான்றிதழ் தேவைப்படுவதால், இன்று முதல் பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளி உள்ளிட்ட பள்ளிகளில், தேர்ச்சி பெற்ற மாணவர்களின் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் பதிவிறக்கம் செய்யப்பட்டு, அந்தந்த தலைமை ஆசிரியர் ஆசிரியர்கள் மூலம் மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.