ஆனைமலையில் உள்ள மக்கள் சக்தி நகர் பகுதியில், தனியாருக்கு சொந்தமான இடத்தில், 40 பனை மரங்கள் வெட்டப்பட்ட சம்பவம் தொடர்பாக, வருவாய் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை: ஆனைமலை மற்றும் ஆழியாற்றில் அனுமதியின்றி பனை மரம் வெட்டியதாக புகார் அளிக்கப்பட்ட நிலையில், வருவாய் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆனைமலையில் உள்ள மக்கள் சக்தி நகர் பகுதியில், தனியாருக்கு சொந்தமான இடத்தில், 40 பனை மரங்கள் வெட்டப்பட்டு உள்ளதாக வருவாய்த்துறை அதிகாரிகளுக்குப் புகார் வந்தது.
இதையடுத்து, ஆனைமலை வட்டாட்சியர் பானுமதி உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் சென்று பார்வையிட்டனர். அனுமதியின்றி பனை மரங்களை வெட்டிய நில உரிமையாளர் யார் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதேபோல, ஆழியாறு பொதுப்பணித்துறை வணிக வளாகங்களில் இருந்த பனை மரம் ஒன்றை வெட்டியதாக சத்தியன் என்பவரிடமும் வருவாய்த்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆனைமலையில் உள்ள மக்கள் சக்தி நகர் பகுதியில், தனியாருக்கு சொந்தமான இடத்தில், 40 பனை மரங்கள் வெட்டப்பட்டு உள்ளதாக வருவாய்த்துறை அதிகாரிகளுக்குப் புகார் வந்தது.
இதையடுத்து, ஆனைமலை வட்டாட்சியர் பானுமதி உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் சென்று பார்வையிட்டனர். அனுமதியின்றி பனை மரங்களை வெட்டிய நில உரிமையாளர் யார் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதேபோல, ஆழியாறு பொதுப்பணித்துறை வணிக வளாகங்களில் இருந்த பனை மரம் ஒன்றை வெட்டியதாக சத்தியன் என்பவரிடமும் வருவாய்த்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.