கோவை ரத்தினபுரியில் உள்ள சுன்னத் ஜமாத் பள்ளி வாசல் அருகே, எஸ்.டி.பி.ஐ அமைப்பினரின் கொடி கம்பம் அருகே, பாரத் சேனா கொடி கம்பத்தை வைத்து, இரண்டு பிரிவினரிடையே மோதலை ஏற்படுத்தும் விதமாக செயல்பட்ட பாரத் சேனா மாநில செயலாளர் வாசு மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்யப்பட்டுள்ளார்.
கோவை: கோவையில் பள்ளி வாசல் எதிரே பாரத் சேனா கொடி கம்பம் வைத்த, பாரத் சேனா மாநிலச் செயலாளரை ரத்தினபுரி போலீசார் கைது செய்தனர்.
கோவை ரத்தினபுரி கண்ணப்பநகர் பகுதியில் உள்ள சுன்னத் ஜமாத் பள்ளி வாசல் அருகே, எஸ்.டி.பி.ஐ அமைப்பினர் வழக்கமாக மாதம் ஒரு முறை கொடியேற்றி இறக்குவது வழக்கம். இந்நிலையில், நேற்று அங்கு ஏற்றப்பட்ட எஸ்.டி.பி.ஐகொடியை இறக்க கோரி பாரத் சேனா அமைப்பினர் ரகளை செய்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து, அந்த பள்ளி வாசல் அருகே பாரத் சேனா அமைப்பின் மாநில செயலாளர் வாசு தலைமையிலான நிர்வாகிகள், பாரத் சேனாகொடி கம்பத்தை வைத்துள்ளனர். இதனால், அங்கு பரபரப்பான சூழல் ஏற்பட்டது. இதையடுத்து தகவலறிந்து வந்த ரத்தினபுரி போலீசார் இரண்டு கம்பங்களையும் அங்கிருந்து அகற்றினர்.
இந்நிலையில், வன்முறையை தூண்டும் வகையிலும், இரண்டு பிரிவினரிடையே மோதலை ஏற்படுத்தும் விதமாக செயல்பட்ட பாரத் சேனா மாநில செயலாளர் வாசு மீது போலீசார் மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
கோவை ரத்தினபுரி கண்ணப்பநகர் பகுதியில் உள்ள சுன்னத் ஜமாத் பள்ளி வாசல் அருகே, எஸ்.டி.பி.ஐ அமைப்பினர் வழக்கமாக மாதம் ஒரு முறை கொடியேற்றி இறக்குவது வழக்கம். இந்நிலையில், நேற்று அங்கு ஏற்றப்பட்ட எஸ்.டி.பி.ஐகொடியை இறக்க கோரி பாரத் சேனா அமைப்பினர் ரகளை செய்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து, அந்த பள்ளி வாசல் அருகே பாரத் சேனா அமைப்பின் மாநில செயலாளர் வாசு தலைமையிலான நிர்வாகிகள், பாரத் சேனாகொடி கம்பத்தை வைத்துள்ளனர். இதனால், அங்கு பரபரப்பான சூழல் ஏற்பட்டது. இதையடுத்து தகவலறிந்து வந்த ரத்தினபுரி போலீசார் இரண்டு கம்பங்களையும் அங்கிருந்து அகற்றினர்.
இந்நிலையில், வன்முறையை தூண்டும் வகையிலும், இரண்டு பிரிவினரிடையே மோதலை ஏற்படுத்தும் விதமாக செயல்பட்ட பாரத் சேனா மாநில செயலாளர் வாசு மீது போலீசார் மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.