ஈஷாவில்‌ தியானலிங்க பிரதிஷ்டையின்‌ 23-வது ஆண்டு தினம்‌ மந்திர உச்சாடனங்கள் உடன் தொடங்கியது!

கோவை ஈஷா யோகா மையத்தில் உள்ள தியானலிங்கம் பிரதிஷ்டையின் 23 வது ஆண்டு தினம் மந்திர உச்சாடனங்கள் உடன் தொடங்கப்பட்டது.



கோவை: கோவை ஈஷா யோகா மையத்தில் உள்ள தியானலிங்கம் பிரதிஷ்டையின் 23 வது ஆண்டு தினம் மந்திர உச்சாடனங்கள் உடன் தொடங்கப்பட்டது

பல்வேறு மத மந்திரங்கள்‌, பாடல்கள்‌ அர்ப்பணிப்பு - கோவை ஈஷா யோகா மையத்தில்‌ உள்ள தியானலிங்கத்தில்‌ 23-வது ஆண்டு பிரதிஷ்டை தினம்‌ இன்று (ஜூன்‌ 24) அனுசரிக்கப்பட்டது. இதில்‌ கடந்த ஆண்டுகளைப்‌ போலவே இந்து, பெளத்த மதங்களின்‌ மந்திர உச்சாடனங்கள்‌ மற்றும்‌ கிறிஸ்துவ, சூஃபி பாடல்கள்‌ இசை வடிவில்‌ அர்ப்பணிக்கப்பட்டன.

தியானலிங்க கருவறையில்‌ காலை 6 மணிக்கு ஈஷா பிரம்மச்சாரிகளின்‌ “அம்‌ நமசிவாய” மந்திர உச்சாடனையுடன்‌ பிரதிஷ்டை தின நிகழ்வு தொடங்கியது. இதைத்‌ தொடர்ந்து 'புத்த மத உச்சாடனைகளை சவுண்ட்ஸ்‌ ஆஃப்‌ ஈஷா குழுவினர்‌ அர்ப்பணித்தனர்‌.

இதேபோல்‌, அமெரிக்க பழங்குடி மக்களின்‌ பாடல்கள்‌, தென்‌ ஆப்பிரிக்க மந்திர உச்சாடனை, சூஃபி சமய பாடல்கள்‌ போன்றவை இசை அர்ப்பணிப்புகளாக செய்யப்பட்டன. அத்துடன்‌ ஆதிசங்கரர்‌ இயற்றிய நிர்வாண ஷடாகம்‌', குரு பாதுக ஸ்தோத்ரம்‌ ஆகிய 2 சக்தி வாய்ந்த மந்திரங்களின்‌ உச்சாடனைகளும்‌ நடைபெற்றன. தேவார பாடல்கள்‌ பாடப்பட்டன.

இந்த உச்சாடனைகளில்‌ ஈஷா ஆசிரமத்தில்‌ வசிப்பவர்கள்‌ பங்கேற்றனர்‌. மாலை 6.10 மணிக்கு 'நாத ஆராதனை' எனும்‌ இசை அர்ப்பணிப்புடன்‌ மந்திர உச்சாடனை நிறைவு பெற்றது. ஒவ்வொரு வருடமும்‌ தியானலிங்க பிரதஷ்டை தினத்தன்று பல்வேறு மதங்களைச்‌ சேர்ந்த மக்கள்‌ ஈஷாவுக்கு வந்து இந்நிகழ்வுகளில்‌ ஆர்வத்துடன்‌ பங்கேற்றதைப் போலவே இந்த வருடமும்‌ பல்லாயிரக்கணக்கான மக்கள்‌ கலந்து கொண்டனர்‌.

ஈஷாவில்‌ உள்ள தியானலிங்கமானது சுமார்‌ 3 ஆண்டுகள்‌ தவிர ஆத்ம சாதனைகளுக்கு பிறகு சத்குரு அவர்களால்‌ 1999-ம்‌ ஆண்டு ஜூன்‌ 24-ம்‌ தேதி பிராண பிரதிஷ்டை செய்யப்பட்டது. 7 சக்கரங்களும்‌ உச்ச நிலையில்‌ சக்தியூட்டப்பட்டுள்ள இந்த லிங்கம்‌ எந்த ஒரு மதத்தையும்‌ சாராமல்‌, ஒரு மனிதர்‌ தனது உயிர்த்‌ தன்மையை உணர்வதற்காக உருவாக்கப்பட்டுள்ளது. பாதரசத்தை கொண்டு ரச வைத்திய முறையில்‌ உருவாக்கப்பட்டுள்ள லிங்கங்களில்‌ இது தான்‌ உலகிலேயே மிகப்பெரிய லிங்கம்‌ என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...