11ம் வகுப்பு மாணவியை திருமணம் செய்த வாலிபர் மற்றும் திருமணத்திற்கு உடந்தையாக இருந்த இருவர் கைது!

பொள்ளாச்சி அருகே 11ம் வகுப்பு மாணவிக்கு ஆசை வார்த்தை கூறி அழைத்துச் சென்று திருமணம் செய்த வாலிபர் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த நண்பர்கள் இருவரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.



கோவை: பொள்ளாச்சி அருகே 11ம் வகுப்பு மாணவிக்கு ஆசை வார்த்தை கூறி அழைத்துச் சென்று திருமணம் செய்த வாலிபர் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த நண்பர்கள் இருவரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

பொள்ளாச்சி அருகே உள்ள பொன்மலையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சஞ்சீவன் என்கிற மணிகண்டன் (29). இவர் ஓட்டுநராக உள்ளார்.

இவருக்கும் பொள்ளாச்சி அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 11ம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவிக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், கடந்த 20ம் தேதி பள்ளி மாணவியை காணவில்லை என்று அவரது பெற்றோர்கள் பொள்ளாச்சி தாலுகா காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர்.

புகார் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், சஞ்சீவன் என்கிற மணிகண்டன் சிறுமியை ஆசை வார்த்தை கூறி அழைத்துச் சென்று அவரது நண்பர்கள் சின்ராஜ் (30) மற்றும் பொன்ராஜ் (27) ஆகியோரின் தலைமையில் திருமணம் செய்து கொண்டது தெரியவந்தது.

இதையடுத்து, மலுமிச்சம்பட்டி அருகே வைத்து சிறுமியை மீட்ட போலீசார், மணிகண்டன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். மேலும் திருமணத்திற்கு உடந்தையாக இருந்த மணிகண்டனின் நண்பர்கள் சின்ராஜ் மற்றும் பொன்ராஜ் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

Newsletter

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...