பொள்ளாச்சி அருகே 11ம் வகுப்பு மாணவிக்கு ஆசை வார்த்தை கூறி அழைத்துச் சென்று திருமணம் செய்த வாலிபர் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த நண்பர்கள் இருவரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கோவை: பொள்ளாச்சி அருகே 11ம் வகுப்பு மாணவிக்கு ஆசை வார்த்தை கூறி அழைத்துச் சென்று திருமணம் செய்த வாலிபர் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த நண்பர்கள் இருவரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
பொள்ளாச்சி அருகே உள்ள பொன்மலையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சஞ்சீவன் என்கிற மணிகண்டன் (29). இவர் ஓட்டுநராக உள்ளார்.
இவருக்கும் பொள்ளாச்சி அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 11ம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவிக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், கடந்த 20ம் தேதி பள்ளி மாணவியை காணவில்லை என்று அவரது பெற்றோர்கள் பொள்ளாச்சி தாலுகா காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர்.
புகார் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், சஞ்சீவன் என்கிற மணிகண்டன் சிறுமியை ஆசை வார்த்தை கூறி அழைத்துச் சென்று அவரது நண்பர்கள் சின்ராஜ் (30) மற்றும் பொன்ராஜ் (27) ஆகியோரின் தலைமையில் திருமணம் செய்து கொண்டது தெரியவந்தது.
இதையடுத்து, மலுமிச்சம்பட்டி அருகே வைத்து சிறுமியை மீட்ட போலீசார், மணிகண்டன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். மேலும் திருமணத்திற்கு உடந்தையாக இருந்த மணிகண்டனின் நண்பர்கள் சின்ராஜ் மற்றும் பொன்ராஜ் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.