கோவை மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற சுகாதாரக்குழு கூட்டத்தில் ஆயுர்வேதிக், சித்தா மருந்தகங்களுக்கு மருந்துகள் வாங்குவதற்கு ரூ.25 லட்சம் தொகை வழங்க அனுமதி உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
கோவை: கோவை மாநகராட்சி அலுவலகத்தில் சுகாதார குழு தலைவர் மாரிச்செல்வன் தலைமையில் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் அதன் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இதில், கோவை மாநகராட்சியை தூய்மையாக மாற்றுவது தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டனர்.
கோவையில் ஆயுர்வேத, சித்தா மருந்தகங்களுக்கு மருந்துகள் வாங்குவதற்கு ரூ.25-லட்சம் தொகை வழங்க அனுமதி பெறுவது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
இதில், கோவை மாநகராட்சியில் மண்டலம் வாரியாக வார்டு பகுதிகளில் கொரோனா பணிகள் மேற்கொள்ளும் மண்டல நல அலுவலர்கள் மற்றும் மண்டல அலுவலர்களுக்கு வாகனங்கள் மாதாந்திர வாடகை அடிப்படையில் நியமனம் செய்வது 3-ஆயுர்வேதிக் மற்றும் 2-சித்தா மருந்தகங்களுக்கு மருந்துகள் வாங்குவதற்கு ரூ.25-லட்சம் தொகையை வழங்க அனுமதி அளிப்பது கோவை மாநகராட்சியின் உள்ள 100-வார்டுகளிலும், தூய்மை பணியை விரைவுபடுத்துவது பொதுமக்களிடம் தூய்மை பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும், பல்வேறு கிருமிகளால் ஏற்படும் நோய்களான மலேரியா டெங்கு போன்றவற்றை பரப்பும் கொசு புழுக்களை அழிக்க பேசில்லஸ் துரஞ்சியன்ஸ் அபேட்பைரத்திரம் மற்றும் மாலத்தியான் மருந்துகள் கொள்முதல் செய்வது போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
இக்கூட்டத்தில் அதன் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இதில், கோவை மாநகராட்சியை தூய்மையாக மாற்றுவது தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டனர்.
கோவையில் ஆயுர்வேத, சித்தா மருந்தகங்களுக்கு மருந்துகள் வாங்குவதற்கு ரூ.25-லட்சம் தொகை வழங்க அனுமதி பெறுவது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
இதில், கோவை மாநகராட்சியில் மண்டலம் வாரியாக வார்டு பகுதிகளில் கொரோனா பணிகள் மேற்கொள்ளும் மண்டல நல அலுவலர்கள் மற்றும் மண்டல அலுவலர்களுக்கு வாகனங்கள் மாதாந்திர வாடகை அடிப்படையில் நியமனம் செய்வது 3-ஆயுர்வேதிக் மற்றும் 2-சித்தா மருந்தகங்களுக்கு மருந்துகள் வாங்குவதற்கு ரூ.25-லட்சம் தொகையை வழங்க அனுமதி அளிப்பது கோவை மாநகராட்சியின் உள்ள 100-வார்டுகளிலும், தூய்மை பணியை விரைவுபடுத்துவது பொதுமக்களிடம் தூய்மை பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும், பல்வேறு கிருமிகளால் ஏற்படும் நோய்களான மலேரியா டெங்கு போன்றவற்றை பரப்பும் கொசு புழுக்களை அழிக்க பேசில்லஸ் துரஞ்சியன்ஸ் அபேட்பைரத்திரம் மற்றும் மாலத்தியான் மருந்துகள் கொள்முதல் செய்வது போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.